அமைதியை சீர்குலைப்போர் மீது கடும் நடவடிக்கை பாயும்.. சித்தராமையா எச்சரிக்கை #bengaluru
பெங்களூரு: காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதை அமைதியாகத்தான் எதிர்கொள்ள வேண்டும். அமைதியை சீர்குலைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூரில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கலவரம் போய் விட்ட பின்னர் சுதாரித்த கர்நாடக அரசு அங்கு அதிரடிப்படை, துணை ராணுவப்படையினரை குவித்து நிலைமையை சரி செய்ய முயன்று வருகிறது. பெங்களூரில் 16 காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மிக மோசமான கலவரத்திற்குப் பின்னர் தற்போது அங்கு அசாதாரணமான நிலை தொடர்கிறது. இந்த நிலையில் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கர்நாடகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
மக்கள் இந்த நேரத்தில் அமைதி காக்க வேண்டும். யாருக்கும் பிரச்சினை கொடுக்கக் கூடாது. பிரச்சினை தருவோர், அமைதியை சீர்குலைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சித்தராமையா.
பெங்களூரில், ராஜ்கோபால் நகர், காமாட்சிபாளையா, விஜய் நகர், பைதராயன்புரா, கெங்கேரி, மகடி சாலை, ராஜாஜி நகர், ஆர் ஆர் நகரா, கேபி அக்ரஹாரா, சந்திரா லேஅவுட், யஷ்வந்த்பூர், மகாலட்சுமி லே அவுட், பீன்யா, ஆர்எம்சி யார்டு, நந்தினி லேஅவுட், ஞானபாரதி ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்ப்பட்டுள்ளது. பெங்களூரின் பிற பகுதிகளில் போலீஸ் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இன்று முற்பகல் சித்தராமையா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் கூடவுள்ளது.
-
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
முதல்வர் பதவிக்கு ‘குட்பை'.. ராஜினாமாவிற்கு பின் சோனியா - ராகுலுக்கு நன்றி கூறி கலங்கிய சித்தராமையா -
கர்நாடகா புது முதல்வர் யார்? டிகே சிவக்குமார் பெயரை சொல்ல மறுத்த சித்தராமையா! அழிக்கப்பட்ட மெசேஜ் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications