அமைதியை சீர்குலைப்போர் மீது கடும் நடவடிக்கை பாயும்.. சித்தராமையா எச்சரிக்கை #bengaluru
பெங்களூரு: காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதை அமைதியாகத்தான் எதிர்கொள்ள வேண்டும். அமைதியை சீர்குலைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூரில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கலவரம் போய் விட்ட பின்னர் சுதாரித்த கர்நாடக அரசு அங்கு அதிரடிப்படை, துணை ராணுவப்படையினரை குவித்து நிலைமையை சரி செய்ய முயன்று வருகிறது. பெங்களூரில் 16 காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மிக மோசமான கலவரத்திற்குப் பின்னர் தற்போது அங்கு அசாதாரணமான நிலை தொடர்கிறது. இந்த நிலையில் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கர்நாடகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
மக்கள் இந்த நேரத்தில் அமைதி காக்க வேண்டும். யாருக்கும் பிரச்சினை கொடுக்கக் கூடாது. பிரச்சினை தருவோர், அமைதியை சீர்குலைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் சித்தராமையா.
பெங்களூரில், ராஜ்கோபால் நகர், காமாட்சிபாளையா, விஜய் நகர், பைதராயன்புரா, கெங்கேரி, மகடி சாலை, ராஜாஜி நகர், ஆர் ஆர் நகரா, கேபி அக்ரஹாரா, சந்திரா லேஅவுட், யஷ்வந்த்பூர், மகாலட்சுமி லே அவுட், பீன்யா, ஆர்எம்சி யார்டு, நந்தினி லேஅவுட், ஞானபாரதி ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்ப்பட்டுள்ளது. பெங்களூரின் பிற பகுதிகளில் போலீஸ் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இன்று முற்பகல் சித்தராமையா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் கூடவுள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications