திரிபுராவிலும் 'சித்து' விளையாட்டு.. 6 திரிணாமுல் எம்.எல்.ஏ.க்களை அலேக்காக அள்ளியது பாஜக
திரிபுராவில் பாஜக சித்து விளையாட்டை காட்டிவிட்டது. 6 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டு சட்டசபைக்குள் நுழைந்துவிட்டது.
அகர்தலா: கட்சிகளை உடைத்து கொல்லைப்புற வழியாக மாநிலங்களின் ஆட்சியைக் கைப்பற்றும் பாஜகவின் ஆடுபுலி ஆட்டத்தில் சிக்கியிருக்கிறது திரிபுரா. அம்மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 6 எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டு முதல் முறையாக சட்டசபைக்குள் நுழைந்துவிட்டது பாஜக.
திரிபுரா சட்டசபைக்கு 2013-ல் தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் உள்ள 60 இடங்களில் 50-ல் மார்க்சிஸ்ட் கட்சி வென்று ஆட்சியைத் தக்க வைத்தது.
காங்கிரஸ் கட்சி 10 இடங்களைப் பிடித்து பிரதான எதிர்க்கட்சியானது. இதனிடையே 2016-ல் 6 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவினர். அஸ்ஸாம் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் கோலோச்சி வந்தது. அஸ்ஸாமில் காங்கிரஸை உடைத்து மாநில ஆட்சியை பாஜக கைப்பற்றியது.

நாகாலாந்து, மணிப்பூரில்...
இதேபோல் நாகலாந்தில் ஆளும் நாகா முன்னணியில் சடுகுடு விளையாடி புதிய அரசில் தொற்றிக் கொண்டது பாஜக. மணிப்பூரிலும் காங்கிரஸை உடைத்து ஆட்சியை பிடித்தது பாஜக.

திரிபுராவுக்கு குறி
திரிபுராவுக்கும் நீண்டகாலமாகவே இலக்கு வைத்து வந்தது பாஜக. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த கடந்த 3 ஆண்டுகளில் இதுவரை 40-க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள் அம்மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டு ஏராளமான வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர்.

ஜனாதிபதி தேர்தல்
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 6 எம்.எல்.ஏக்கள், பாஜகவின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு வாக்களித்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இந்த 6 எம்.எல்.ஏக்களையும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி அதிரடியாக நீக்கினார்.

பாஜகவில் ஐக்கியம்
மமதாவால் நீக்கப்பட்ட 6 எம்.எல்.ஏக்களும் சனிக்கிழமையன்று டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவை சந்தித்தனர். இந்த 6 எம்.எல்.ஏக்களும் நேற்று முறைப்படி பாஜகவில் இணைந்தனர். அகர்தலாவில் நடைபெற்ற மிகப் பிரமாண்ட நிகழ்ச்சியில் 6 எம்.எல்.ஏக்களும் தங்களது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தனர்.

திரிபுரா சட்டசபையில் பாஜக
இதனைத் தொடர்ந்து திரிபுரா மாநில சட்டசபையில் பாஜகவும் தனது கணக்கைத் தொடங்கிவிட்டது. தற்போது திரிபுரா மாநில சட்டசபையில் பாஜகவுக்கு 6 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். திரிபுராவில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications