பாகிஸ்தானிலிருந்து வந்து இந்தியாவில் சிக்கிய புறா.. ரேஸ் புறாவாமே!
டெல்லி: பாகிஸ்தானிலிருந்து வந்து இந்தியாவில் சிக்கிய புறா, உளவுப் புறா அல்ல, அது ரேஸ் புறா என்று கூறுகிறார்கள்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் இந்த புறா சிக்கியது. அந்தப் புறாவி்ன் இறக்கையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இடம் பெற்றிருந்த எழுத்துக்களை வைத்து அது உளவுப் புறாவாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால் தற்போது அது பந்தப் புறாவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது அந்தப் புறாவுக்கு தீனி கொடுத்துப் பராமரித்து வருகிறதாம் பதன்கோட் போலீஸ்.

இந்தப் புறா உளவுப் புறாவாக இருந்தால் அதை அனுப்பியது யார் என்பதை அறிய போலீஸாரும், உளவுப் பிரிவினரும் முயற்சிகள் எடுப்பார்கள். ஒரு வேளை அது பந்தப் புறாதான் என்பது உறுதியானால் அதை உரிய காப்பகத்தில் ஒப்படைத்து வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமாம்.
இந்தப் புறா உளவுப் புறாவா அல்லது பந்தப் புறாவா என்பதை அறிய பதன்கோட் போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி அது உளவுப் புறா என்பதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. அறிகுறியும் இல்லை.
இருப்பினும் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
அந்தப் புறாவுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது. அதன் உடலில் எந்தப் பகுதியிலும் சிப் எதுவும் பொருத்தப்படவில்லை. மேலும் நுன்னிய கேமரா உள்ளிட்ட எந்த மின்னணுப் பொருட்களும் கிடைக்கவில்லை. அதன் இறக்கையில் இடம் பெற்றுள்ள எழுத்துக்கள் மட்டுமே சந்தேகத்திற்கிடமாக உள்ளன. மற்றபடி அந்தப் புறாவிடமிருந்து எந்த சந்தேகத்திற்கிடமான பொருளும் கிடைக்கவில்லை.
புறாவின் இறக்கையில் இடம் பெற்றிருந்த எண்கள், தொலைபேசி எண்ணாக இருக்கலாம் என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அது தொலைபேசி எண் அல்ல என்பது பின்னர் தெரிய வந்தது.
அந்த எழுத்துக்கள் உருதில் உள்ளன. தெளிவாகவும் இல்லை. எனவே அதன் இறக்கையில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. புரியவில்லை.
இப்படி பாகிஸ்தானிலிருந்து புறா வந்து சிக்குவது இது முதல் முறையல்ல. மார்ச் 29ம் தேதியும் கூட இதேபோல ஒரு புறா வந்தது. அந்தப் புறாவானது, குஜராத் மாநிலத்தில் இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் சிக்கியது. விசாரணையில் அது பந்தப் புறா வகையைச் சேர்ந்தது என்று தெரிய வந்தது. இருப்பினும் அந்தப் புறாவின் உடலில் சிப் பொருத்தப்பட்டிருந்தது. உருது வாசகங்களும் இடம் பெற்றிருந்தன.
அந்தப் புறாவின் காலில் சிப் பொருத்தப்பட்டிருந்தது. மேலும் 28733 என்ற எண்ணும் இடம் பெற்றிருந்தது. மேலும் அதில் ரசுல் உல் அல்லா என்ற எழுத்தும் காணப்பட்டது.
-
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
மக்களின் கண்ணோட்டமே உங்களை பிரபலமாக மாற்றுகிறது.. விஜய்க்கு கிருத்திகா உதயநிதி சூசக அட்வைஸ்! -
“ஒரு சாதாரண வக்கீல்” .. சீண்டிய ஜெயலலிதா.. ப.சிதம்பரம் செய்த சம்பவங்கள்! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
"தமிழ்நாடு உங்களை மறக்காது" ஆளுநரிடம் சொல்லி ஸ்டாலின் தந்த பரிசு பாருங்க! உடனே RN ரவியின் பரவச பதில் -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
அரபு நாடுகள் மீது இனி தாக்குதல் கிடையாது.. மன்னிப்பு கேட்ட ஈரான் அதிபர்! முடிவுக்கு வரும் போர்? -
பக்கத்து நாட்டை தாக்க மாட்டோம்னு சொல்லி.. துபாய் விமான நிலையத்தை அட்டாக் செய்த ஈரான்! ஷாக் வீடியோ -
என்னடா இது அதிமுகவுக்கு வந்த சோதனை.. காலி நாற்காலிகளுடன் கூட்டம்.. நொந்துபோன கௌதமி












Click it and Unblock the Notifications