பாகிஸ்தானிலிருந்து வந்து இந்தியாவில் சிக்கிய புறா.. ரேஸ் புறாவாமே!
டெல்லி: பாகிஸ்தானிலிருந்து வந்து இந்தியாவில் சிக்கிய புறா, உளவுப் புறா அல்ல, அது ரேஸ் புறா என்று கூறுகிறார்கள்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் இந்த புறா சிக்கியது. அந்தப் புறாவி்ன் இறக்கையில் சந்தேகத்திற்கிடமான முறையில் இடம் பெற்றிருந்த எழுத்துக்களை வைத்து அது உளவுப் புறாவாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால் தற்போது அது பந்தப் புறாவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது அந்தப் புறாவுக்கு தீனி கொடுத்துப் பராமரித்து வருகிறதாம் பதன்கோட் போலீஸ்.

இந்தப் புறா உளவுப் புறாவாக இருந்தால் அதை அனுப்பியது யார் என்பதை அறிய போலீஸாரும், உளவுப் பிரிவினரும் முயற்சிகள் எடுப்பார்கள். ஒரு வேளை அது பந்தப் புறாதான் என்பது உறுதியானால் அதை உரிய காப்பகத்தில் ஒப்படைத்து வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமாம்.
இந்தப் புறா உளவுப் புறாவா அல்லது பந்தப் புறாவா என்பதை அறிய பதன்கோட் போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி அது உளவுப் புறா என்பதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. அறிகுறியும் இல்லை.
இருப்பினும் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
அந்தப் புறாவுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டுள்ளது. அதன் உடலில் எந்தப் பகுதியிலும் சிப் எதுவும் பொருத்தப்படவில்லை. மேலும் நுன்னிய கேமரா உள்ளிட்ட எந்த மின்னணுப் பொருட்களும் கிடைக்கவில்லை. அதன் இறக்கையில் இடம் பெற்றுள்ள எழுத்துக்கள் மட்டுமே சந்தேகத்திற்கிடமாக உள்ளன. மற்றபடி அந்தப் புறாவிடமிருந்து எந்த சந்தேகத்திற்கிடமான பொருளும் கிடைக்கவில்லை.
புறாவின் இறக்கையில் இடம் பெற்றிருந்த எண்கள், தொலைபேசி எண்ணாக இருக்கலாம் என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் அது தொலைபேசி எண் அல்ல என்பது பின்னர் தெரிய வந்தது.
அந்த எழுத்துக்கள் உருதில் உள்ளன. தெளிவாகவும் இல்லை. எனவே அதன் இறக்கையில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை. புரியவில்லை.
இப்படி பாகிஸ்தானிலிருந்து புறா வந்து சிக்குவது இது முதல் முறையல்ல. மார்ச் 29ம் தேதியும் கூட இதேபோல ஒரு புறா வந்தது. அந்தப் புறாவானது, குஜராத் மாநிலத்தில் இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் சிக்கியது. விசாரணையில் அது பந்தப் புறா வகையைச் சேர்ந்தது என்று தெரிய வந்தது. இருப்பினும் அந்தப் புறாவின் உடலில் சிப் பொருத்தப்பட்டிருந்தது. உருது வாசகங்களும் இடம் பெற்றிருந்தன.
அந்தப் புறாவின் காலில் சிப் பொருத்தப்பட்டிருந்தது. மேலும் 28733 என்ற எண்ணும் இடம் பெற்றிருந்தது. மேலும் அதில் ரசுல் உல் அல்லா என்ற எழுத்தும் காணப்பட்டது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications