வடகிழக்கு மாநிலங்களில் பலாத்காரம், கொலை.. ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவு
டெல்லி: வடகிழக்கு மாநிலத்தில் நடைபெற்ற பலாத்காரம் மற்றும் கொலைகள் தொடர்பாக ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் ககோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட கிளர்ச்சியை அடக்க ஆயுதப்படை சட்டத்தின் மூலம், ராணுவத்திற்கு முழு பலம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, அப்பாவி மக்களிடம் ராணுவம் அத்துமீறியதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து விசாரித்த நீதிபதிகள் அடங்கிய இரு குழுக்கள், சுப்ரீம்கோர்ட்டில் சமர்ப்பித்த அறிக்கையில், குற்றச்சாட்டில் உண்மை இருப்பதை உறுதி செய்தது.
இதுகுறித்து விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட் நீதிபதி, மதன். பி லோகூர் தலைமையிலான அமர்வு, ராணுவத்தினர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. "இறந்தவர்களுக்கு இழப்பீடு கொடுப்பதோடு அரசின் கடமை முடியவில்லை. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மதன் பி. லோகூர் உத்தரவிட்டார்.
முன்னதாக மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல், ரோகட்கி கூறுகையில், "கிளர்ச்சி, தீவிரவாதம் போன்றவற்றை அடக்கும் முயற்சியின்போது, எதிர்பாராதவிதமாக நடைபெற்ற சம்பவங்களை கொண்டு, மொத்த ராணுவத்தையும் குறை கூற முடியாது. சிறப்பு கோர்ட் அமைத்து இவ்வழக்கை விசாரிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது" என்று தெரிவித்தார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங்












Click it and Unblock the Notifications