இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தை குறித்து மோடி - சுஷ்மா சுவராஜ் ஆலோசனை
டெல்லி: பாகிஸ்தானுடன் பாதுகாப்பு தொடர்பான உயர் மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்றிரவு சந்தித்தார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இம்மாதம் 15ம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். மத்திய வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.

பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தையை நடத்துவது குறித்து இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார். எனினும், பதன்கோட் தாக்குதலை அடுத்து இருநாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், பதன்கோட் தாக்குதல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசாரை, பாகிஸ்தான் போலீசார் கைது செய்திருப்பதாக வெளியான தகவல் உறுதிப்படுத்தப்பட்டது அல்ல என விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.
பதான்கோட் தாக்குதல் தொடர்பாக ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் உட்பட 12 பேரை பாகிஸ்தான் காவல்துறை கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.
-
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
மொத்த இந்தியாவும் முடங்கப்போகுது.. தீவிரமாகும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. மோடியை சந்தித்த பூரி - ஜெய்சங்கர் -
பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேராயும் போட்டுடைத்த க்ளீடன் -
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி! -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
இஸ்ரேலால் இந்திய அடுப்புகளுக்கு ஆப்பு? கேஸ் சிலிண்டர் விலை உயர்வு வெறும் டிரைலர் தானா? என்னாகும்? -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்












Click it and Unblock the Notifications