இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தை குறித்து மோடி - சுஷ்மா சுவராஜ் ஆலோசனை
டெல்லி: பாகிஸ்தானுடன் பாதுகாப்பு தொடர்பான உயர் மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்றிரவு சந்தித்தார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இம்மாதம் 15ம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். மத்திய வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.

பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தையை நடத்துவது குறித்து இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார். எனினும், பதன்கோட் தாக்குதலை அடுத்து இருநாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், பதன்கோட் தாக்குதல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசாரை, பாகிஸ்தான் போலீசார் கைது செய்திருப்பதாக வெளியான தகவல் உறுதிப்படுத்தப்பட்டது அல்ல என விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.
பதான்கோட் தாக்குதல் தொடர்பாக ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் உட்பட 12 பேரை பாகிஸ்தான் காவல்துறை கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா -
வங்கி கணக்கில் வந்து விழுந்த ரூ.10 கோடி.. "வேண்டாம்" என திருப்பி கொடுத்த பெண்! என்ன காரணம் தெரியுமா -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல்












Click it and Unblock the Notifications