இந்தியா, பாகிஸ்தான் பேச்சுவார்த்தை குறித்து மோடி - சுஷ்மா சுவராஜ் ஆலோசனை
டெல்லி: பாகிஸ்தானுடன் பாதுகாப்பு தொடர்பான உயர் மட்ட அளவிலான பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடியை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்றிரவு சந்தித்தார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இம்மாதம் 15ம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். மத்திய வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார்.

பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தையை நடத்துவது குறித்து இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார். எனினும், பதன்கோட் தாக்குதலை அடுத்து இருநாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்நிலையில், பதன்கோட் தாக்குதல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மவுலானா மசூத் அசாரை, பாகிஸ்தான் போலீசார் கைது செய்திருப்பதாக வெளியான தகவல் உறுதிப்படுத்தப்பட்டது அல்ல என விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.
பதான்கோட் தாக்குதல் தொடர்பாக ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் உட்பட 12 பேரை பாகிஸ்தான் காவல்துறை கைது செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.
-
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
"AI தயாரித்த ரிப்போர்ட் போல உள்ளது.." கீழடி அறிக்கையை திருத்த சொன்ன மத்திய அரசுக்கு அமர்நாத் பதிலடி -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications