பெல்லாரி: தமிழக லாரிகள் மீது கல்வீச்சு.. உயிருக்கு பயந்து டிரைவர்கள் ஓட்டம் #TNNeedsKaveri
பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகா பந்த் நடத்துகின்றன. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடைபெறுகிறது.
பெங்களூரில் பஸ், டாக்சி, ஆட்டோக்கள் ஓடவில்லை. மாநிலம் முழுக்கவுமே வாகன இயக்கம் முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. வட கர்நாடகாவில் வழக்கமாக காவிரி பிரச்சினையில் தீவிரம் குறைவாக இருக்கும். ஆனால் இம்முறை அங்கும் ஆதரவு அதிகரித்துள்ளது.

இதன் ஒருபகுதியாக பெல்லாரியில் இன்று தமிழக பதிவெண் கொண்ட லாரி மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பெல்லாரி பைபாஸ் சாலையில், டி.என்.52, எஃப் 8667 என்ற பதிவெண் கொண்ட வீனஸ் ரோட்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான லாரி சென்றதை போராட்டக்காரர்கள் கவனித்தனர்.
இதையடுத்து லாரியை சூழ்ந்து கொண்ட கன்னட சங்கத்தினர், டிரைவர் கீழே இறங்க கூட அனுமதிக்காமல், கருங்கற்களை கண்ணாடிகள் மீது வீசினர். இதனால் கண்ணாடி உடைபட்டு கல் உள்ளே போனது. அச்சமடைந்த டிரைவர், அவசரமாக கீழே குதித்து ஓடினார்.
இதேபோல மேலும் இரு லாரிகளும் கல் எறிந்து தாக்குதலுக்கு உள்ளானது. இந்த சம்பவங்கள் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக பெல்லாரி போலீஸ் எஸ்.பி ஆர்.சேத்தன் 'ஒன்இந்தியாவிடம்' தெரிவித்தார்.
-
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
"தமிழகம் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்!" மேகதாது விவகாரத்தில்.. வாயை விட்ட டிகே சிவக்குமார் -
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications