பெங்களூர் சாலைகளில் இருந்து 37 கிலோ ஆணி சேகரித்த என்ஜினியர்: போட்டது யார் தெரியுமா?
பெங்களூர்: பெங்களூரில் வசிக்கும் சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் பஞ்சர் கடைக்காரர்களால் சாலைகளில் வேண்டும் என்றே போடப்படும் ஆணிகளில் 37 கிலோ ஆணிகளை இதுவரை சேகரித்துள்ளார்.

பெனிடிக்ட் ஜெபகுமார்(44) என்ற சாப்ட்வேர் என்ஜினியர் கடந்த 2012ம் ஆண்டு பெங்களூருக்கு வந்துள்ளார். பனசங்கரியில் தங்கியிருக்கும் அவரது அலுவலகம் பெல்லந்தூரில் உள்ளது. தினமும் அவுட்டர் ரிங் ரோடு வழியாக செல்கையில் சரியாக பஞ்சர் போடும் கடைகளுக்கு அருகே அவரது வாகனத்தின் டயரில் ஆணி குத்தி பஞ்சர் ஆகிவிடும்.
முதலில் இதை சாதாரணமாக எடுத்துக் கொண்ட அவருக்கு பின்பு தான் உண்மை புரிந்தது. பஞ்சர் கடைக்காரர்கள் தங்களுக்கு வியாபாரம் நடக்க வேண்டும் என்பதால் வேண்டும் என்றே சாலைகளில் ஆணிகளை போட்டு வைப்பதை ஜெபகுமார் உணர்ந்தார்.
இதையடுத்து கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அவர் சாலைகளில் கிடக்கும் ஆணிகளை அகற்றி வருகிறார். காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பும் அவர் தினமும் சாலைகளில் இருந்து ஆணிகளை அகற்றி சேகரித்து வருகிறார்.
இதுவரை அவர் 37 கிலோ ஆணிகளை சேகரித்துள்ளார். இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை ஆணிகளை சேகரிக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஆணிகளை சேகரித்து வரும் அவர் 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஃபேஸ்புக்கில் `My Road, My Responsibility' (என் சாலை, என் பொறுப்பு) என்ற பெயரில் கணக்கு துவங்கி தான் சேகரிக்கும் ஆணிகள் குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications