இந்த நூற்றாண்டில் வங்காள விரிகுடாவின் கடுமையான புயல் அம்பன் .. கொரோனாவுக்கு மத்தியில் பெரும் சவால்
கொல்கத்தா: இந்த நூற்றாண்டில் வங்காள விரிகுடாவின் கடுமையான புயல் இந்த ஆம்பன் சூப்பர் சூறாவளி புயல். இந்தியாவின் மேற்கு வங்கத்திற்கும் வங்கதேசத்திற்கும் இடையே இன்று கரையை கடக்கிறது. ஒரு பக்கம் கொரோனா மிரட்டும் நிலையில் மறுபக்கம் புயலும் வந்திருப்பதால் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதும் அதிகாரிகளுக்கு மிகுந்த போராட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
இந்த புயல் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. பேரழிவு தரக்கூடிய மற்றும் ஆபத்தான புயல் வீசும் என்ற கணிப்புகளுடன். இன்று கரையை கடக்க உள்ளதால் உச்சகட்டமாக உஷார் நிலையில் மீட்பு படைகள் செயல்பட்டு வருகின்றன.
சூப்பர் சூறாவளி ஆம்பனின் பாதையில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். வடகிழக்கு இந்தியப் பெருங்கடலில் உருவாகும் இரண்டாவது "சூப்பர் சூறாவளி" இந்த ஆம்பன் புயல் ஆகும்.

முயற்சிகள் தடைபட்டுள்ளன
ஆனால் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவாமல் தடுக்க கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதன் அவசியம் உள்ள நிலையில் புயலால் முயற்சிகள் தடைபட்டுள்ளன, இரு நாடுகளிலும் தொற்று எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வருகிறது. நாடு தழுவிய லாக்டவுன் அவர்களின் வாழ்வாதாரங்களை காலி செய்த நிலையில் பல ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெரிய நகரங்களிலிருந்து வீடு திரும்ப முயற்சிக்கும் சாலைகளில் சென்று வருகிறார்கள்.

இந்திய வானிலை
இது ஒருபுறம் எனில் மேற்கு வங்க மாநிலத்தில் கரையை கடக்க உள்ள பகுதிகள் ஆம்பன் புயல் எப்படி பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து இந்திய வானிலை மையம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவின் வானிலை அலுவலகத் தலைவர் மிருதுஞ்சய் மொஹாபத்ரா இதுபற்றி கூறுகையில், மணிக்கு 240 கிமீ / மணி (150 மைல்) வேகத்தில் காற்று வீசுகிறது இது ஒரு வகை-நான்கு சூறாவளிக்கு சமமானதாகும். மேற்கு வங்கம் மற்றும் அண்டை நாடான வங்கதேசத்தின் கடலோரங்களைக் கடப்பதற்கு முன்பு இது சற்று வலுவிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அது "பெரிய அளவிலான மற்றும் விரிவான சேதத்தை ஏற்படுத்தும்" அளவுக்கு வலுவாக இருக்கக்கூடும் என்று தெரிவித்தார்.

16 அடி அலைகள் எழும்
வங்ககடலில் 10 அடி முதல் 16 அடி (3-5 மீ) அலைகள் எழும் என்றும் இது இரண்டு மாடி வீட்டைப் போல உயரமாக இருக்கும் என்றும் இந்தியா வானிலை மையம் கணித்துள்ளது. ஆம்பன் சூறாவளி நெருங்கிய நிலையில் பல லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயற வைத்துள்ளது இந்தியா. அதிகப்படியான ஆற்று வெள்ளம் பெரும்பாலும் கடுமையான சூறாவளிகளின் போது பெரும் உயிர் இழப்புக்கு காரணமாகின்றன. 3 கோடி மக்கள் வசிக்கும் வங்கதேசத்தின் தாழ்வான கடற்கரை மற்றும் இந்தியாவின் கிழக்கு கடற்கரை ஆகியவை சமீபத்திய ஆண்டுகளில் நூறாயிரக்கணக்கான மக்களின் உயிரை சூறாவளிகள் கொன்றுள்ளன. அவை சூறாவளியால் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றன.

ஆம்பன் சக்தி வாய்ந்த புயல்
1999 ஆம் ஆண்டில், ஒடிசாவில் ஒரு சூப்பர் சூறாவளி தாக்கி கிட்டத்தட்ட 10,000 பேர் கொல்லப்பட்டனர். எட்டு ஆண்டுகளுக்கு முன்னர், வங்கதேசத்தில் ஒரு சூறாவளி, மற்றும் வெள்ளம் 139,000 பேரைக் கொன்றது. 2007 ஆம் ஆண்டில் சிதர் சூறாவளி வங்கதேச நாட்டை பேரழிவிற்கு உள்ளாக்கியதில் சுமார் 3,500 பேர் உயிரிழந்தனர். மற்றும் பில்லியன் கணக்கான டாலர்களை சேதப்படுத்தியதில் இருந்து ஆம்பன் மிக சக்திவாய்ந்த புயலாக இருக்கும் என்று வங்க தேச நாட்டு அதிகாரிகள் அஞ்சுகின்றனர். இரு நாடுகளிலும் உள்ள அதிகாரிகள் கூட்டத்தை குறைக்க கூடுதல் தங்குமிடம் பயன்படுத்துவதாகவும், அதே சமயம் முககவசத்தை கட்டாயமாக்கி கூடுதல் சோப் மற்றும் சானிடைசர் வழங்குவதாகவும் தெரிவித்தனர்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications