அமைச்சருக்கு எந்த அதிகாரமும் இல்லை.. அவரால் சுயமாக பேச முடிவதில்லை.. போட்டு தாக்கும் ராகேஷ் டிக்கைட்
இந்தூர்: வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரை மறைமுகமாக தாக்கிப் பேசிய ராகேஷ் டிக்கைட், மக்கள் தேர்ந்தெடுத்துள்ள தலைவருக்கு உண்மையில் எந்தவொரு அதிகாரமும் இல்லை என்றும் அவரால் சுயமாக எதையும் பேச முடிவதில்லை என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக தலைநகரில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் தற்போது 100ஆவது நாளை கடந்தும் தொடர்கிறது.
விவசாயிகள் போராட்டத்திற்கு நாடு முழுவதும் உள்ள பொதுமக்களின் ஆதரவை திரட்டும் வகையில் கிசான் மகா பஞ்சாயத்து என்று நிகழ்ச்சியையும் விவசாயிகள் நடத்துகின்றனர். இதில் பங்கேற்கும் விவசாய தலைவர்கள், மத்திய அரசின் சட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்குகின்றனர்.

ஒரு லட்சம் டிராக்டர்கள்
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் ஷியோபூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட், "குடியரசு தினத்தன்று நாங்கள் 3,500 டிராக்டர்களுடன் மாபெரும் பேரணியை வெற்றிகரமாக நடத்தினோம், அதேபோல தேவைப்பட்டால் ஒரு லட்சம் டிராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிடவும் தயாராகவே உள்ளோம்" என்றார்.

டிராக்டர் பேரணி குழப்பம்
மத்திய அரசுக்கு எதிராகக் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது. இதில் வெளியாட்கள் சிலர் புகுந்ததால் திடீரென குழப்பம் ஏற்பட்டது. அப்போது டிராக்டர் கவிழ்ந்து விவசாயி ஒருவர் உயிரிழந்தார். அதேபோல போலீசார் தரப்பிலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், அப்போது யாரும் எதிர்பாராத வகையில் டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், அங்கிருந்த கொடிக்கம்பத்தில் விவசாய அமைப்புகளுக்கு ஆதரவான கொடியை ஏற்றியது குறிப்பிடத்தக்கது.

அதிகாரம் இல்லாத அமைச்சர்
வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரையும் தனது உரையில் ராகேஷ் டிக்கைட் மறைமுகமாகத் தாக்கிப் பேசினார். அதாவது, மக்கள் தேர்ந்தெடுத்துள்ள தலைவருக்கு உண்மையில் எந்தவொரு அதிகாரமும் இல்லை என்றார். மேலும், அவரால் சுயமாக எதையும் பேச முடிவதில்லை என்றும் ஒவ்வொரு முறையும் கோப்புகளைச் சென்று பார்த்துவிட்டு தான் பதில் கூற முடிகிறது என்றும் அவர் விமர்சித்தார்.

உடன்பாடு இல்லை
விவசாய சட்டங்களை திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயச் சங்க தலைவர்களுக்கும் இடையே இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. அடுத்த 18 மாதங்களுக்கு விவசாய சட்டங்களை நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், சட்டங்கள் நிரந்தரமாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications