செல்போன், லேப்டாப் திருடிய வாலிபரை அடித்துக் கொன்று ஆணுறுப்பை அறுத்த பயிற்சி மருத்துவர்கள்!
கொல்கத்தா: கொல்கத்தாவில் மருத்துவமனை தங்கும் விடுதியில் நுழைந்து செல்போன் மற்றும் லேப்டாப்பைத் திருடிச் சென்ற நபரை, பயிற்சி மருத்துவர்கள் சேர்ந்து அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள நில் ரதன் சிர்கார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தங்கும் விடுதியில் பயிற்சி மருத்துவர்கள் தங்கி உள்ளனர். கடந்த ஓராண்டாக இந்த விடுதியில் இருந்து செல்போன் மற்றும் லேப் டாப் போன்றவை திருடு போவது வழக்கமாக இருந்துள்ளது. ரூ 20 லட்சம் மதிப்புள்ள 50- முதல் 60 லேப்டாப்கள் மற்றும் செல்போன்கள் இதுவரை திருடு போய் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு 28 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் விடுதிக்குள் நுழைந்து, பயிற்சி மருத்துவர்களின் செல்போன் மற்றும் லேப்டாப் திருடிகொண்டு தப்பியோட முயற்சித்துள்ளார். ஆனால், சுதாரித்துக் கொண்ட பயிற்சி மருத்துவர்கள் திருடனை துரத்திப் பிடித்து அடித்தனர்.
இதில், அந்த வாலிபர் மயக்கம் அடைந்துள்ளார். உடனடியாக இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.
விரைந்து வந்த போலீசார் அவ்வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அங்கு அந்த வாலிபர் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சில ஜூனியர் டாக்டர்கள் உட்பட சிலரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த வாலிபரை பயிற்சி மருத்துவர்கள் விடுதியின் விளையாட்டு அறைக்குக் கொண்டு சென்று, அவரது மர்ம உறுப்பை கூர்மையான ஆயுதங்களால் வெட்டி எடுத்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி ஒருவர் போலீசில் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 7 பேர் கொண்ட ஒரு குழுவை மருத்துவமனை நிர்வாகம் அமைத்து உள்ளது. இது தொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சட்டம் அதன் கடமையை செய்யும்' என்றார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications