மும்பை: விஷச்சாராய பலி எண்ணிக்கை 105 ஆக உயர்ந்தது- மேலும் 2 பெண்கள் கைது
மும்பை: மும்பையில் 105 பேரின் இறப்பிற்கு காரணமான விஷச் சாராய வழக்கில் இரண்டு பெண்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பை மால்வாணியில் விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை கூலித்தொழிலாளர்கள் வாங்கி குடித்தார்கள். விஷத்தன்மை கொண்டிருந்த அந்த சாராயத்திற்கு இதுவரையிலும் 105 பேர் பலியாகி விட்டனர். தொடர்ந்து பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் சாவு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக, அங்கு சாராயம் சப்ளை செய்த ராஜூ லங்கடா, கவுதம், ஆர்டே, டோனால்டு பட்டேல், பிரான்சிஸ் டிமோலோ, சலீம் சேகர் ஆகியோரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், மேலும் 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதில் நேற்று மம்தா லட்சுமண், அக்னீஸ் கிரேஸி ஆகிய இரண்டு பெண்கள் குற்றப்பிரிவு போலீசாரிடம் சிக்கினார்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கைதான இருவரும் சாராயத்தை சப்ளைக்கு கொண்டு வரும் வேலையை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் இருவரும் மும்பை கில்லா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி இருவரையும் வருகிற 26-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.
இதற்கிடையே, குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் அங்கு விற்பனை செய்யப்பட்ட சாராயம் தானே மற்றும் கல்யாண் காட்டுப்பகுதிகளில் காய்ச்சி கொண்டு வந்திருந்ததும், விற்பனைக்கு பிளாஸ்டிக் பரேல்களில் கொண்டு வரப்பட்ட சாராயம் கைதான பிரான்சிஸ் டிமோலோவிற்கு சொந்தமான குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இந்த தகவலை தொடர்ந்து போலீசார் அவரது குடோனிற்கு சென்று அங்கிருந்த 1000 லிட்டர் சாராயத்தை கைப்பற்றினார்கள். அந்த சாராயம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் அதிகளவில் விஷத்தன்மை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த விஷச்சாராயத்தை குற்றப்பிரிவு போலீசார் கீழே கொட்டி அழித்தனர். இதுவரையில் 105 பேரை பலி கொண்ட இந்த சம்பவத்தில் கைது செய்யப்படும் அனைவர் மீது மோக்கா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க குற்றப்பிரிவு போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா உத்தரவிட்டுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications