தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம்: கைதாகாமல் இருக்க டிடிவி தினகரன் தப்பி ஓடி தலைமறைவு?
தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதாகாமல் தப்ப டிடிவி தினகரன் தலைமறைவாகிவிட்டதாக பரபரப்பு கிளம்பியுள்ளது.
பெங்களூரு: இந்திய தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதாகமல் இருப்பதற்காக டிடிவி தினகரன் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் ஆணையத்துக்கு ரூ50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார் தினகரன் என்பது வழக்கு. இதற்காக தினகரனுக்கு புரோக்கர் வேலை பார்த்த சுகேஷ் டெல்லி போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுகேஷிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் தினகரன் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குகள் போடப்பட்டுள்ளன. மேலும் தினகரனை விசாரணைக்கு அழைக்கக் கோரும் சம்மனுடன் டெல்லி போலீஸ் அதிகாரி தமிழகம் விரைந்துள்ளனர்.
இந்த நிலையில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை பார்க்க போவதாக தினகரன் கூறியிருந்தார். இதற்காக பெங்களூரு சென்று ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார் தினகரன்.
ஆனால் சசிகலாவோ தினகரனை சந்திக்க மறுத்துவிட்டார். இதையடுத்து ஹோட்டலை விட்டு வெளியே சென்ற தினகரன் எங்கே போனார் என தெரியவில்லை என கூறப்படுகிறது.
அதிமுக நிர்வாகிகள் தினகரனை வழக்கமாக தொடர்பு கொள்ளும் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் கைது நடவடிக்கையில் இருந்து தப்ப தினகரன் தலைமறைவாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்வது தொடர்பாக தமது வழக்கறிஞர்களுடன் தினகரன் ரகசிய இடத்தில் ஆலோசனை நடத்தி வரலாம் என்றும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications