டெல்லி பலாத்கார சம்பவம்... 'உபேர்'டாக்ஸி நிறுவனம் தான் பொறுப்பு: மக்கள் கருத்து!!
டெல்லி: டெல்லியை உலுக்கிய பலாத்கார சம்பவத்துக்கு கவனக் குறைவாக இருந்த உபேர் கால் டாக்சி நிறுவனமே பொறுப்பு என்று இன்ஸ்டாவானி நிறுவனத்தின் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு டெல்லியில் கடந்த 5-ந் தேதியன்று உபேர் கால் டாக்சி நிறுவன ஓட்டுநரால் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி ஏற்கெனவே பலாத்கார வழக்கில் சிறையில் இருந்தவர். அவரைப் பற்றி விசாரிக்காமல் பணிக்கு சேர்த்த உபேர் கால்டாக்சி நிறுவனம் மீது கோபம் திரும்பியது. இதனால் உபேர் கால் டாக்சி நிறுவனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த தடையை எதிர்த்து நீதிமன்றத்துக்கு செல்வோம் என்று உபேர் நிறுவனம் கூறி வருகிறது.

உபேரே பொறுப்பு
இந்த நிலையில் இன்ஸ்டாவானி நிறுவனமானது நாடு முழுவதும் 1118 பேரிடம் டெல்லி பலாத்கார சம்பவம் குறித்து ஒரு கருத்து கணிப்பை நடத்தியது. இதில் 76% பேர் கவனக்குறைவாக இருந்ததற்கு உபேர் கால் டாக்சி நிறுவனமே பொறுப்பு என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

பெண்கள் சீற்றம்
சென்னை, பெங்களூர், மும்பை, கொல்கத்தா நகரங்களில் 70%க்கும் அதிகமானோர் உபேர் நிறுவனத்தின் மீதுதான் குற்றம்சாட்டுகின்றனர். பெண்களில் 81% பேர் உபேர் நிறுவனம் மீது குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

உபேர் டாக்சியில் போவீங்களா?
உபேர் கால் டாக்சி நிறுவனம் வசதியாகத்தான் இருக்கிறது என 40.62% பேரும் அதை பயன்படுத்த மாட்டோம் என்று 59.38% பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

உபேருக்கு தடை சரியா?
உபேர் கால் டாக்சி நிறுவனத்துக்கு டெல்லியில் தடை விதிக்கப்பட்டது சரி என்று 48.08%; ஏற்க முடியாது என்று 51.92% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications