ஏழைகளின் நலனுக்காகத்தான் பண ஒழிப்பு நடவடிக்கை - மத்திய அரசு
டெல்லி: ஏழைகளின் நலனுக்காகத்தான் பண ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதிக மதிப்புடைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்புக்கு எதிராக பல்வேறு மனுக்கள், வெவ்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த அனைத்து மனுக்களையும் ஒரே நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு முறையிட்டது. இந்த விவகாரத்தின் மீது விசாரணை நடத்த உயர் நீதிமன்றங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு, தனது மனுவில் வலியுறுத்தியிருந்தது.
இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்தது. உயர் நீதிமன்றங்கள் வாயிலாக மக்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளதால் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "நாட்டில் புழக்கத்தில் இருந்த பணத்தில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள்தான் 85 சதவீதம் இருந்தன. இந்த நோட்டுகளில்தான் அதிக அளவில் கள்ள நோட்டுகளும் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. மேலும், பயங்கரவாத அமைப்புகளுக்கு கள்ள நோட்டுகள் மூலமே நிதியும் கிடைக்கப்பெற்று வந்தன.
மேலும், நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் சவாலாக விளங்கிய கருப்புப் பணம் பெரும்பாலும் ரூ.500, ரூ.1000 நோட்டுகளாகவே இருந்தன. இந்த கருப்புப் பணத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வந்தது ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும்தான்.
இதன் காரணமாகவே, ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாததாக்குவது என முடிவு செய்யப்பட்டது.
கருப்புப் பணத்தை ஒழித்து, அதன் மூலம் ஏழைகள் நலம் பெற வேண்டும் என்பதற்காகவே அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டன.
கருப்புப் பணப் பதுக்கல்காரர்கள் விழித்துக் கொள்ளாமல் இருக்க இந்த நடவடிக்கை ரகசியமாக இருக்க வேண்டியது அவசியம். இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை முடுக்கிவிட்டால் இந்த விஷயம் வெளியில் கசிந்துவிடும்.
அவ்வாறு நடந்தால், அரசின் நோக்கமே சிதைந்துபோகும். இதனைக் கருத்தில்கொண்டே இந்த அறிவிப்பு திடீரென வெளியிடப்பட்டது.
இந்த நடவடிக்கையால் மக்களுக்கு குறுகிய காலத்துக்கு சிரமம் இருக்கும் என்பதை மறுக்கவில்லை. அதேநேரத்தில், இதன் மூலம் நீண்டகால பலன் மக்களுக்கு கிடைக்கும். கருப்புப் பணத்தால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள் பயனடைவார்கள்; வரி ஏய்ப்பு முற்றிலும் தவிர்க்கப்படும்.
மேலும், இந்த நடவடிக்கையால் மனை வணிகத் துறையில் முடக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான கருப்புப் பணம் வெளிவரும். இதனால், எதிர்காலத்தில் வீட்டு மனைகளின் விலை கணிசமாகக் குறையும். இதனால் அனைவரும் சொந்த வீடு வாங்கலாம் என்ற நிலை ஏற்படும்.
இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள சிரமத்தைக் குறைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications