உ.பி. உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: 2 மாநகராட்சிகளை கைப்பற்றியது பகுஜன் சமாஜ்!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநில உள்ளாட்சி தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி 2 மாநகராட்சிகளைக் கைப்பற்றி திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக பெற்ற விஸ்வரூப வெற்றியைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியானது. பகுஜன் சமாஜ் கட்சியும் வியூகங்களை மாற்றி வகுத்தது.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் 3 கட்டங்களாக கடந்த மாதம் 22,26 மற்றும் 29 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை பகுஜன் சமாஜ் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.
இத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 16 மாநகராட்சிகளில் 14 பாஜக வசமாகிறது. 4 மாநகராட்சிகளைக் கைப்பற்றியுள்ள பாஜக 10-ல் முன்னிலை வகிக்கிறது.
அலிகார், மீரட் மாநகராட்சிகளை பகுஜன் சமாஜ் கைப்பற்றியுள்ளது. தலித் மற்றும் முஸ்லிம்களின் வாக்குகள் அப்படியே பகுஜன் சமாஜ் கட்சிக்கு கிடைத்திருக்கிறது.
மொத்தம் உள்ள 652 உள்ளாட்சி இடங்களில் 340-ல் பாஜகவும் 117-ல் பகுஜன் சமாஜ் கட்சியும் முன்னிலை வகிக்கின்றன. சமாஜ்வாடி கட்சியோ 89 இடங்களிலும் காங்கிரஸ் வெறும் 19 இடங்களிலும்தான் முன்னிலை வகிக்கிறது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications