For Daily Alerts
Just In
'முட்டாள் அரசியல்வாதிகள்'- சி.என்.ஆர். ராவ் கருத்துக்கு காங்கிரஸ் பதில்
மத்திய அரசு அறிவியல் துறைக்கு போதுமான நிதி ஒதுக்காததை சுட்டி காட்டி அரசியல்வாதிகளை முட்டாள்கள் என சாடினார் பாரத ரத்னா விருது பெறும் விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ்,. இந்நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் மனீஷ்திவாரி இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக விளக்கம் அளித்தார்.
அப்போது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இதற்கு உதாரணமாக ஐக்கியமுற்போக்கு கூட்டணி ஆட்சியில்தான் சந்திராயன், மங்கள்யான் மற்றும் அரிஹந்த் விண்கலங்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இந்த அரசு போல் எந்த அரசுமே அறிவியலுக்கும் ஆராய்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்ததில்லை என்றார்.
Comments
English summary
A day after Bharat Ratna awardee and eminent scientist CNR Rao called politicians "idiots" for giving scientists "so little", Information and Broadcasting Minister Manish Tewari said on Monday that the UPA Government has given maximum support to science and research.
Story first published: Monday, November 18, 2013, 13:27 [IST]