வியாபம் ஊழலில் சிக்கிய ம.பி. ஆளுநரை நீக்கக் கோரும் மனு- விசாரணைக்கு ஏற்றது சுப்ரீம் கோர்ட்!
டெல்லி: வியாபம் ஊழலில் சிக்கிய மத்திய பிரதேச மாநில ஆளுநர் நரேஷ் யாதவை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச தொழில்நுட்ப தேர்வு வாரியம் 2013-ம் ஆண்டு நடத்திய மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் முன்னாள் கல்வி அமைச்சர் லட்சுமிகாந்த் சர்மா உள்பட இதுவரை 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 700 பேரை போலீஸ் தேடி வருகிறது.
மத்திய பிரதேச ஆளுநர் ராம்நரேஷ் யாதவும் இந்த ஊழலில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். ஆனால் குற்றவாளி பட்டியலில் இருந்து அவரை நீதிமன்றம் விடுவித்தது. இந்த நிலையில் அவருடைய மகன் சைலேஷ் யாதவ் கடந்த மார்ச் மாதம் லக்னோவில் உள்ள தனது தந்தையின் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
இதேபோல் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் 47 பேர் இதுவரை மர்மமான முறையில் இறந்துள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி செய்தி சேகரித்த செய்தியாளார் அக்சய் சிங் வாயில் நுரைதள்ளி மர்மமான முறையில் இறந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், இந்த ஊழலில் தொடர்புடைய மருத்துவக்கல்லூரி முதல்வர் டீன் ஒருவர் நேற்று மர்மமான முறையில் மரணமடைந்தார்.
இதேபோல் இன்று பயிற்சி பெண் போலீஸ் அதிகாரி ஒருவரும் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதால் இப்பிரச்சினை பெரும் பூதகரமாகி உள்ளது.
இதனிடையே வியாபம் ஊழலில் ஆளுநர் நரேஷ் யாதவுக்கு உள்ள தொடர்பை விசாரிக்கவும் அவரை பதவி நீக்கம் செய்யவும் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. மேலும் வியாபம் தொடர்பான அனைத்து மனுக்களையும் வரும் 9-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து மற்றும் நீதிபதிகள் அருண் குமார் மிஸ்ரா மற்றும் அமிதாவா ராய் அடங்கிய பெஞ்ச் தெரிவித்து உள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications