நேருக்கு நேர் வந்த விமானங்கள்.. நூலிழையில் உயிர் பிழைத்தேன்.. மம்தா பானர்ஜி உருக்கம்.. பரபர பின்னணி!
கொல்கத்தா : மேற்கு வங்க மாநில முதலமைச்சரும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி உத்திர பிரதேசத்தில் இருந்து கொல்கத்தா திரும்பிய போது விமான விபத்தில் சிக்க இருந்ததாகவும் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக கூறியுள்ளார்.
Recommended Video
உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டசபை கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்காக உத்திரபிரதேசம் சென்றிருந்தார் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி.
உபியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை முடித்துவிட்டு கொல்கத்தாவுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமானத்தில் திரும்பினார்

மம்தா பானர்ஜி
கொல்கத்தா நோக்கி நடுவானில் விமானம் சென்று கொண்டு இருந்தபோது அவர் பயணம் செய்த விமானம் கடுமையாக குலுங்கி அதிர்ந்தது. இதன் காரணமாக பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு உள்காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. நடுவானில் விமானம் குலுங்கி விபத்துக்குள்ளாக இருந்த நிலையில் விமானத்தின் விமானி மிக சாதுரியமாக அந்த விமானத்தை தொடர்ந்து இயக்கினார்.

விமான விபத்து?
கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் எந்தவித ஆபத்துமின்றி விமானத்தை தரை இறக்கினார். இந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குனரகத்துக்கு மேற்குவங்க அரசு கடிதம் எழுதியது. அதில் விமானம் சென்ற பாதையில் மற்றொரு விமானம் வந்தது குறித்தும், விமானம் குலுங்கியதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக விளக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

மம்தா விளக்கம்
இந்த சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில் அன்று என்ன நடந்தது என்பது குறித்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி தற்போது கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் தான் பயணம் செய்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது எதிரே மற்றொரு விமானம் நேருக்கு நேராக திடீரென வந்ததாகவும், சில வினாடிகள் அந்த விமானம் இதே போல் பறந்து இருந்தால் தான் பயணம் செய்த விமானமும் எதிரே வந்த விமானமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டு இருக்கும் என்றார்.

உள் காயம்
மேலும் தான் பயணம் செய்த விமானத்தை இயக்கிய விமானி தனது புத்தி கூர்மையால் விமானத்தை மாற்று வழியில் இயக்கியதால் தான் உயிர் பிழைத்ததாகவும், விமானம் சுமார் 6000 அடி கீழே இறங்கிய நிலையில் தனக்கு காயம் ஏற்பட்டதாக கூறியுள்ளார். தனக்கு இன்னும் வலி உள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் , இந்த சம்பவம் தொடர்பாக விமான போக்குவரத்து துறை மற்றும் மத்திய அரசிடம் இருந்து எந்த விளக்கமும் வரவில்லை என்று மம்தா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications