எத்தனை புத்தகம் போட்டாலும் மன்மோகன்ஜி வாயை திறந்து பதில் சொல்லிவிடுவாரா என்ன?
Subscribe to Oneindia Tamil
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை விமர்சித்து எத்தனை புத்தகங்கள் வெளிவந்தாலும் அதுபற்றியெல்லாம் வாயே திறக்கமாட்டார் போல.. இப்போது முன்னாள் சி.ஏ.ஜி. வினோத் ராய் மன்மோகனை மாட்டிவிடும் புத்தகத்தை வெளியிடப் போகிறார்.
மன்மோகன்சிங்கின் ஆட்சிக் காலத்தில் ஊடக செயலராக இருந்த சஞ்சய் பாரூ, நிலக்கரித் துறை செயலராக பி.சி. பரேக் ஆகியோர் 2 புத்தகங்களை எழுதியிருந்தனர்.

இந்த புத்தகங்களில் மன்மோகன்சிங் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த விமர்சனங்கள் மன்மோகன்சிங்கை பாடாய்படுத்திவிட்டது.
மன்மோகன்சிங்கின் ஊடகச் செயலராக இருந்த சஞ்சய் பாரு 'சந்தர்ப்பவசமாக வந்த பிரதமர்' என்ற புத்தகத்தில் கூறியிருந்தது:
- அதிகாரமற்றவராக இருந்தவர் மன்மோகன்சிங். அரசைக் கட்டுப்படுத்தும் சக்தி அவருக்கு இருந்தது இல்லை.
- பிரதமர் அலுவலகத்துக்கு வருவதற்கு முன்பே மத்திய அரசின் கோப்புகளை சோனியா காந்தி பார்வையிட்டார்.
- அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு, அதிகாரிகள் இடமாற்றம் போன்ற முக்கிய முடிவுகளை சோனியா காந்தியே எடுத்தார்.
- சோனியா காந்திக்கும், மன்மோகன்சிங்குக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தன.
- பி.சி. பரேக் எழுதிய "சிலுவை சுமந்தவரா, சதிகாரரா? நிலக்கரி சுரங்க ஊழலும், பிற உண்மைகளும்" புத்தகத்தில் இடம்பெற்றவை:
- பிரதமர் மன்மோகன் சிங் ஒருவேளை பதவியை ராஜினாமா செய்திருந்தால் நாட்டுக்கு நல்ல பிரதமர் கிடைத்திருப்பாரா என்று எனக்குத் தெரியாது.
- மன்மோகன்சிங்குக்கு அதிகாரம் குறைவாக இருந்ததால்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு ஆகியவற்றால் அவரது மதிப்பு சீர்குலைந்தது.
- ஹிண்டால்கோ நிறுவனத்தின் தலைவர் ஆதித்ய பிர்லா, நிலக்கரித்துறை முன்னாள் செயலாளரான என் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. உச்சநீதிமன்றத்தின் கவனத்தை கவர்வதற்காகவே சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்கா, இந்த வழக்கில் என் பெயரைச் சேர்த்தார்.
- இவ்வழக்கில் என் பெயரை சேர்க்க பிரதமர் மன்மோகன்சிங்தான் முடிவு எடுத்தார் என்கிறபோது, வழக்கில் அவர் பெயரை சேர்க்காதது ஏன்?
- இதைத் தொடர்ந்து தற்போது முன்னாள் சி.ஏ.ஜி. வினோத் ராய் மன்மோகன்சிங்கை சிக்க வைக்கும் புத்தகத்தை வெளியிட இருக்கிறார். இது குறித்து வினோத் ராய் கூறியதாவது:
- நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சர்ச்சைக்குரிய முடிவுகளை எடுத்ததை மன்மோகன்சிங் அறிவார்.
- ஸ்பெக்ட்ரம் அறிக்கை தொடர்பான சி.ஏ.ஜி அறிக்கையில் சில காங்கிரஸ் தலைவர்கள் பெயர் இடம்பெறாமல் இருக்க மன்மோகனுக்கு நெருக்கடி தரப்பட்டது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications