சிபிஐக்கும் கமிஷனருக்கும் அப்படி என்ன வாய்க்கா தகராறு.. தீதியை "தீ"யாக்கிய சம்பவத்தின் பின்னணி என்ன?
Recommended Video

கொல்கத்தா: சிபிஐ அதிகாரிகளுக்கும் கமிஷனருக்கும் இடையே அப்படி என்னதான் விவகாரம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மத்திய அரசை கண்டித்து மம்தா பானர்ஜி நேற்று முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இவருக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன
இரவு நேரத்தில் அத்தனை மீடியாக்களையும் தூங்க விடாமல் செய்த விஷயம்தான் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் பரபர பின்னணியை பார்ப்போம்.

2013- இல் புகார்
மேற்கு வங்கத்தை தலைமையிடமாக கொண்டு சாரதா நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் ரூ. 2 ஆயிரம் கோடியை முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கடந்த 2013-ஆம் ஆண்டு புகார் கொடுக்கப்பட்டது.

சிபிஐ, அமலாக்கத் துறை
இந்த நிலையில் கொல்கத்தா போலீஸ் கமிஷனராக இருந்து வரும் ராஜீவ் குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்தியது. இந்த மோசடி தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆஜராகவில்லை
இந்த மோசடி தொடர்பாக சில முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதாக தெரியவந்தது. இது குறித்து ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது.

சிபிஐ அதிகாரிகள்
இந்த நிலையில் ராஜீவ் குமார் தலைமறைவாகிவிட்டதாக சிபிஐ அறிவித்தது. இதனால் அவர் எந்நேரத்திலும் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில்தான் நேற்றைய தினம் ராஜீவ் குமாரை தேடி சி.பி.ஐ. இணை இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவத்சவா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டுக்கு சென்றனர்.

போராட்டம்
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் சிபிஐ அதிகாரிகளை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. தகவலறிந்த கொல்கத்தா போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்றார். அங்கு 15 சிபிஐ அதிகாரிகளை அவர்கள் கைது செய்தனர். இதனால் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications