பல முக்கிய வழக்குகளை கையாண்ட அனுபவசாலி தீபக் மிஸ்ரா!
மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான யாகூப் மேனனின் தூக்குத் தண்டனையை உறுதி செய்த நீதிபதிகள் அமர்வில் தீபக் மிஸ்ராவும் இருந்தார்.
டெல்லி: மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய யாகூப் மேனன், தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள தீபக் மிஸ்ராவின் பங்கு முக்கியமானது.
உச்சநீதிமன்றத்தின் 45-ஆவது புதிய தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்ட தீபக் மிஸ்ரா இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2018) அக்டோபர் 2-ஆம் தேதி முடிவடையும்.

1977-இல் வழக்கறிஞர்
கடந்த 1953ஆம் ஆண்டு அக்டோபர்மாதம் 3-ஆம் தேதி பிறந்தார். அவர் கடந்த 1977-ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்துக் கொண்டார். அரசியலமைப்பு, சிவில், குற்றவியல், வருவாய், சேவை மற்றும் விற்பனை வரி விவகாரங்கள் ஆகியவற்றை ஒரிசா உயர்நீதிமன்றத்தில் அனுபவமாக பெற்றுக் கொண்டார்.

நிரந்தர நீதிபதி
கடந்த 1996-ஆம் ஆண்டு ஜனவரி 17-இல் ஒடிசா உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு பின்னர் அடுத்த ஆண்டே மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். கடந்த 1997-இல் அந்த நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக ஆனார்.

2011-இல் உச்சநீதிமன்றத்தின் நீதிபதி
கடந்த 2009-இல் பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா பொறுப்பேற்றார். பின்னர் 2010-இல் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியானார். இதைத் தொடர்ந்து 2011-இல் உச்சநீதிமன்றத்தின் நீதிபதியானார்.

3-ஆவது நபராவார்
நீதிபதிகளான ரங்கநாத் மிஸ்ரா, ஜிபி பட்நாயக் ஆகியோருக்கு அடுத்து ஒரிசாவிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் தீபக் மிஸ்ரா 3-ஆவது நபராவார்.

யாகூப் மேனன் வழக்கு
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் யாகூப் மேனனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் யாகூப் மேனன் கருணை மனுவை மேல்முறையீடு செய்தார். இதை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, யாகூப் மேனனின் மனுவை தள்ளுபடி செய்து தூக்கு தண்டனையை உறுதி செய்தது. அந்த 3 நீதிபதிகளில் தீபக் மிஸ்ராவும் ஒருவராவார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications