ஜெயலலிதாவின் பறிமுதலாகும் சொத்துகள்... நீதிமன்ற சிறப்பு அதிகாரி பிச்சைமுத்து விளக்கம்
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முதல்வர் ஜெயலைதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத் தொகையை யார், எப்படி கட்டுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றத்தில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய பிச்சைமுத்து, 100 கோடி ரூபாயை வசூலிக்க இருக்கும் வாய்ப்புகள் குறித்து ஒன் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் விவரித்துள்ளார்.
ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மறைந்து, 6ந் தேதி நல்லடக்கம் செய்யப்படுகிறார். அதன்பிறகு, செப்டம்பர் 14-ந் தேதியன்று உச்சநீதிமன்றம், சொத்து குவிப்பு வழக்கில் கீழ் கோர்ட் விதித்த தண்டனையை உறுதி செய்தது.
அதில் ஜெயலலிதா மறைந்துவிடாலும் 100 கோடி அபராத தொகையை கட்ட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இப்போது அந்த நூறு கோடியை யார் கட்டுவார்கள், எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கு நீதிமன்றத்தில் தொடக்கம் முதலே சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய பிச்சைமுத்துவிடம் ஒன் இந்தியா சில சந்தேகங்களை எழுப்பியது. அதற்கு அவர் கூறியதாவது:

போயஸ் கார்டன் வீடு
ஜெயலலிதா 1991 லிருந்து 1996 ஆண் ஆண்டு வரை அவர் வாங்கிய அல்லது ஆக்கிரமித்த சொத்துக்கள் ஏலம் விடப்படும் வாய்ப்புகள் உள்ளன. போயஸ்கார்டன் வீட்டின் இரண்டு தளங்களின் மீதும் கோர்ட் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.

தங்க நகைகள், வெள்ளி பாத்திரங்கள்
ஆனால் 1991க்குப் பிறகு கூடுதலாகக் கட்டப்பட்ட 31 ஏ என்ற எண்கொண்ட கட்டடத்தை பறிமுதல் செய்யலாம். சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையின்போது கைப்பற்றப்பட்ட தங்க நகைகள், வெள்ளிப் பாத்திரங்கள், வாகனங்கள்ஆகியவற்றை ஏலம் விட்டு அபராதத் தொகையை வசூலிக்கலாம்.

நிலம்
ஜெயலலிதா 1991-96 வரை முதல்வராக இருந்த போது, தஞ்சை, நெல்லை, காஞ்சிபுரம் ஆகிய ஊர்களில் வாங்கப்பட்ட நிலங்களை ஏலத்தில் விட்டு வசூலிக்கலாம். ஹைதரபாத்தில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான திராட்சை தோட்டம் உள்ளது. ஆனால், அந்த சொத்து 1991ஆம் ஆண்டுக்கு முன்பே வாங்கப்பட்டுள்ளது.

ஆந்திரா சொத்துகள்
அதனை அந்த திராட்சை தோட்டத்தை ஏலம் விட இயலாது. செகந்திராபாத்தில் ஜெயலலிதாவுக்கு இருக்கும் வீட்டையும் ஏலம் விட இயலாது.

கர்நாடகா அரசு குழு
ஜெயலலிதாவின் சொத்துக்கள் எங்கெங்கு உள்ளது என்று ஆராய்ந்து அவற்றை ஏலத்தில் விட்டு அபாரத தொகையை கர்நாடக அரசு வசூலிக்க வேண்டும். இதற்கென்று தனியாக ஒரு குழு அமைக்க வேண்டும். அது கர்நாடக அரசின் பொறுப்பு.
இவ்வாறு பிச்சைமுத்து கூறினார்.
-
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications