டெல்லி கலாம் வீட்டை அறிவுசார் மையமாக்க மத்திய அரசு மறுப்பு- பா.ஜ.க.வில் இருந்து அண்ணன் மகன் விலகல்!!
டெல்லி: மறைந்த மக்கள் குடியரசுத்தலைவரான டாக்டர். அப்துல் கலாம் அவர்களின் அண்ணன் மகன் ஹாஜா சையது இப்ராஹிம் பா.ஜ.க கட்சியிலிருந்து அதிரடியாக விலகியுள்ளார்.
"ராமேஸ்வரத்தில் இருந்த போது, மக்களுக்காக நிறைய பொது சேவை செய்துள்ளேன். அந்த பொது சேவை இனியும் தொடர ஏதாவது ஒரு கட்சியில் இணைந்து பணியாற்ற விரும்பினேன். என் எண்ணங்களையும், தாத்தாவின் லட்சியங்களையும் செயல்படுத்தும் இயக்கமாக, பா.ஜ.க தான் தெரிந்தது" என்று கூறி கட்சியில் இணைந்த ஹாஜா சையது இன்று அக்கட்சியிலிருந்து அதிரடியாக விலகியுள்ளார்.

முன்னதாக கலாம் இறந்ததும் அவர் தங்கியிருந்த ராஜாஜி சாலையில் உள்ள 10 ஆம் எண் அரசு இல்லத்தை "அறிவு மையமாக மாற்ற வேண்டும் என்றும், நினைவிடமாக மாற்ற வேண்டும் என்றும் அனைத்து தரப்பினரும் கோரி வந்தனர். ஆனால் இந்த கோரிக்கைகளை எல்லாம் புறக்கணித்த மத்திய அரசோ, கடந்த அக்டோபர் மாதம் அந்த வீட்டில் இருந்த அப்துல் கலாமின் புத்தகங்கள், அவரது இசைக் கருவியான வீணை உள்ளிட்ட அனைத்து பொருள்களையும் அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைத்தது.
மேலும், நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் கலாம் தங்கியிருந்த அரசு இல்லத்தை, "நான் குர்-ஆன் மற்றும் பைபிள் நூல்களை மதிக்கிறேன். ஆனால், அது இந்தியாவின் ஆன்மாவுடன் ஒத்துப்போவதில்லை. ராமாயணமும், மகாபாரதமும்தான் இந்திய ஆன்மோவோடு ஒத்துப்போகின்றன" என்று கூறிய மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் ஷர்மாக்கு ஒதுக்கீடு செய்தது.
இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியோ, இது அப்துல் கலாமை அவமானப்படுத்தும் செயல் என்றும் கூறியது. ஆனால் தற்போது அந்த இல்லத்தில் மகேஷ் சர்மாவே வசிக்கிறார்.
இந்நிலையில் இந்த அதிரடி முடிவு குறித்து ஹாஜா சையது வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாணவர்கள், இளைய சமூகத்தினர், பொதுமக்கள் என்று பல்வேறு தரப்பினரும் என்னிடம், அப்துல் கலாம் தங்கியிருந்த இல்லத்தை அவரது நினைவிடமாக மாற்றாததால் பா.ஜ.கவிலிருந்து விலகி விடுமாறு பரிந்துரைத்தனர். கலாமின் மீதிருந்த ஆழமான அன்பின் காரணமாக அவர்கள் இப்படிச் செய்ய வற்புறுத்தினர்.
எனவே, அவர்களின் பரிந்துரையை ஏற்று கட்சியின் அடிப்படைப் பொறுப்பிலிருந்து விலகி விட்டேன். எனது ராஜினாமா கடிதத்தை பா.ஜ.க தலைமைக்கு அனுப்பியிருக்கிறேன். இனிமேல் அமைதியாக தனித்தே எனது பொது சேவையை தொடர்வேன்" என்று தெரிவித்துள்ளார்.
பேரன் ஷேக் சலீம் மறுப்பு:
இந்நிலையில் அப்துல் கலாம் அவர்களின் அண்ணன் வழிப் பேரனான ஷேக் சலீம்தான் பா.ஜ.கவிலிருந்து வெளியேறிவிட்டார் என்ற தவறான தகவல் பரவியது. இதனையடுத்து அவர், பாஜகவிலிருந்து விலகியது நானல்ல... ஊடகங்கள் குழப்பத்தில் என்னுடைய பெயரையும், புகைப்படத்தினையும் வெளியிட்டு விட்டன என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
-
Annamalai: தமிழக சட்டசபை தேர்தல்.. ஒரு வழியாக பாஜகவின் "அந்த" பட்டியலில் இடம்பெற்ற அண்ணாமலை பெயர்! -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
நம்மதான் ஜெயிக்கிறோம்.. கோவையில் செந்தில் பாலாஜி மாஸ் திட்டம்.. கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை -
Sellur Raju: பாஜகவுடன்தானே? பாகிஸ்தானுடனா கூட்டணி வைத்தோம்? ஆவேசமான செல்லூர் ராஜு! -
எச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவி? சென்னையில் உறுதி கொடுத்த பிரதமர் மோடி.. பாஜக மேலிடம் எடுத்த முடிவு! -
"அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என பிளான் போட்ட முக்கிய தலைகள்”.. போட்டு உடைத்த திருச்சி சூர்யா! -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
காலம் இருக்கு.. காட்சிகள் மாறும்! தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை கொடுத்த புது விளக்கம் -
அண்ணாமலைக்கு இந்த பவர்ஃபுல் போஸ்ட்டிங் தர்றாரா மோடி.. கோவை பிடிவாதம் உடைந்ததா? லாபமா? நஷ்டமா -
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஒரு சோர்ந்துபோன கூட்டணி.. புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! -
விஜய் மனதில் பாஜக இருக்கிறது.. அடித்து சொல்லும் குஷ்பூ.. காரணம் தெரியுமா? -
தேர்தல் பரப்புரையில்.. துரந்தர், கேரளா ஸ்டோரி, காஷ்மீர் ஃபைல்ஸ் பற்றி பேசிய மோடி! கேரளாவில் சலசலப்பு












Click it and Unblock the Notifications