எனக்கு எப்படியாவது உதவுங்கள்.. பிரதமருக்கு பெங்களூரை சேர்ந்த பெண் கடிதம்
பெங்களூரை சேர்ந்த அத்யா ஸத்பாதி என்ற பெண் பிரதமர் நரேந்திர மோடிக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.
பெங்களூர்: பெங்களூரை சேர்ந்த 'அத்யா ஸத்பாதி' என்ற பெண் பிரதமர் நரேந்திர மோடிக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் தான் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு சட்டத் தீர்வு வேண்டும் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
பெங்களூரை சேர்ந்த அத்யா ஸத்பாதி முதல் வகை சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இவர்களுக்கு அடிக்கடி பசிக்கும் என்பதால் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டி இருக்கும். ஆனால் இவர் எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பதை பார்த்த இவரது நண்பர்கள் இவரை கிண்டல் செய்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த கேலிகளை தாங்கிக் கொள்ள முடியாமல் அத்யா ஸத்பாதி புதிய முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறார். அதன்படி தனது கஷ்டங்களை பற்றி பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
அதில் ''என்னை என் கஷ்டத்தில் இருந்து எப்படியாவது காப்பாற்றுங்கள். என்னுடைய குறைபாடை எல்லோரும் கேலி செய்கிறார்கள். இதில் இருந்து வெளியே வர ஒரு வழிதான் இருக்கிறது. மாற்றுத் திறனாளிகளை கிண்டல் செய்வதற்கு எதிராக அரசு உருவாக்கி இருக்கும் சட்டத்தில் சர்க்கரை வியாதியையும் சேர்த்து விடுங்கள்'' என்று கேட்டு இருக்கிறார்.
இந்த சட்டத்தின் படி குறிப்பிட்ட சில நோய் உள்ளவர்களை கிண்டல் செய்தால் இரண்டு ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்படும். மேலும் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். சென்ற ஆண்டு இறுதியில் வந்த இந்த சட்டம் அடுத்த மாதம் மீண்டும் மறுஆய்வு செய்யப்பட இருக்கிறது.
இந்த சட்டத்தில் இதுவரை சர்க்கரை வியாதி இல்லை பட்டியலில் இல்லை. இதன் மறு ஆய்வில் சேர்க்கப்படுமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications