எடியூரப்பா மீதான 15 நில மோசடி வழக்குகளையும் தள்ளுபடி செய்த கர்நாடகா ஹைகோர்ட்
பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது லோக் ஆயுக்தவில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 15 வழக்குகளை அந்த மாநில உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இது எடியூரப்பாவிற்கு நிம்மதியை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
பெங்களூர் அருகே உள்ள அரகெரே, தேவசிக்கன ஹள்ளி ஆகிய இடங்களில் பெங்களூர் வளர்ச்சி ஆணையம் கையகப்படுத்திய 12 ஏக்கர் நிலத்தை விடுவித்து அதன் உரிமையாளர்களுக்கு சாதகமாக செயல்பட்டதாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது சமூக ஆர்வலர் ஜெயக்குமார் ஹிரேமத், லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக எடியூரப்பா மீது தனித்தனியாக 15 முதல் தகவல் அறிக்கைகளை லோக் ஆயுக்தா பதிவு செய்தது. இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறும் சிஐடிக்கு உத்தரவிடப்பட்டது. போலீசார் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நில விடுப்பில் முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து எடியூரப்பா மீது 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
15 வழக்குகள் தள்ளுபடி
இதை எதிர்த்து, எடியூரப்பா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ரத்னகலா, லோக் ஆயுக்த தாக்கல் செய்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். இந்தத் தீர்ப்பு முன்னாள் முதல்வர் எடியூரப்பா தரப்புக்கு புதிய உற்சாகத்தை அளித்துள்ளது.
அடுத்தடுத்த உற்சாகம்
கர்நாடகாவில் இரும்பு தாதுக்களை பிரித்தெடுக்கும் சுரங்கம் நடத்த தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சலுகை வழங்கியதாகவும், இதன் மூலம் எடியூரப்பாவின் மகன்களுக்கு பண ஆதாயம் கிடைத்ததாகவும், கடந்த 2011ம் ஆண்டு மக்கள் நீதிமன்றமான லோக் ஆயுக்தா, அறிக்கை தாக்கல் செய்தது.
அதன் அடிப்படையில், காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
பறிபோன முதல்வர் பதவி
இதனையடுத்து, பாரதிய ஜனதா மேலிடத்தின் கட்டளைப்படி, அப்போதைய முதல்வர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தனக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்கப்படாமல், தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், இதில் இயற்கை நீதி பின்பற்றப்படவில்லை என்றும் எடியூரப்பா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், லோக்ஆயுக்தா அறிக்கையின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதே போல தற்போது எடியூரப்பாவிற்கு எதிராக போடப்பட்ட 15 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் புதிய உற்சாகத்தில் இருக்கிறார் எடியூரப்பா.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications