உ.பி.யில் பயங்கரம்: 12 வயது சிறுவன் நரபலி - சாமியார் உட்பட 3 பேர் கைது
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் 12 வயது சிறுவன் நரபலி கொடுக்கப் பட்ட சம்பவம் தொடர்பாக சாமியார் உட்பட மூவர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் பதோகி மாவட்டம் திலனுகா கிராமத்தை சேர்ந்த சுமித் என்ற 12 வயது சிறுவனைக் காணவில்லை என கடந்த சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.
இதற்கிடையே அந்த கிராமத்துக்கு வெளியே சிறுவனின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவன் நரபலி கொடுக்கப் பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சாமியார் உபேந்திரா மற்றும் அவரது உதவியாளர்கள் இருவர் சேர்ந்து சிறுவனை நரபலி கொடுத்து துண்டு துண்டாக வெட்டியது உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக போலீஸ் சூப்பிரெண்டு சுபாஷ் சந்திர துபே செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
சிறுவனை முதலில் கழுத்தை நெறித்து கொன்று உள்ளனர். கண்களை தோண்டி வெளியே எடுத்தனர். பின்னர் தலை மற்றும் உடல் உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டி உள்ளனர். கோவில் அருகே யாகம் செய்து அவர்கள் சிறுவனை நரபலி கொடுத்து இருக்கிறார்கள்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நரபலி என்ற பெயரில் சிறுவன் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications