உ.பி.யில் பயங்கரம்: 12 வயது சிறுவன் நரபலி - சாமியார் உட்பட 3 பேர் கைது
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் 12 வயது சிறுவன் நரபலி கொடுக்கப் பட்ட சம்பவம் தொடர்பாக சாமியார் உட்பட மூவர் கைது செய்யப் பட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் பதோகி மாவட்டம் திலனுகா கிராமத்தை சேர்ந்த சுமித் என்ற 12 வயது சிறுவனைக் காணவில்லை என கடந்த சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினார்கள்.
இதற்கிடையே அந்த கிராமத்துக்கு வெளியே சிறுவனின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவன் நரபலி கொடுக்கப் பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சாமியார் உபேந்திரா மற்றும் அவரது உதவியாளர்கள் இருவர் சேர்ந்து சிறுவனை நரபலி கொடுத்து துண்டு துண்டாக வெட்டியது உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக போலீஸ் சூப்பிரெண்டு சுபாஷ் சந்திர துபே செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
சிறுவனை முதலில் கழுத்தை நெறித்து கொன்று உள்ளனர். கண்களை தோண்டி வெளியே எடுத்தனர். பின்னர் தலை மற்றும் உடல் உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டி உள்ளனர். கோவில் அருகே யாகம் செய்து அவர்கள் சிறுவனை நரபலி கொடுத்து இருக்கிறார்கள்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நரபலி என்ற பெயரில் சிறுவன் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications