4 மாசத்தில் தலைகீழாகிவிட்டது.. மரணத்தின் விளிம்பில் 2.28 கோடி பேர்.. தாலிபான்களின் ஆப்கானில் அவலம்
காபூல்: ஆப்கானிஸ்தானில் நிலவும் உணவு தட்டுப்பாடு காரணமாக அங்கு 10 லட்சம் குழந்தைகள் இந்த குளிர்காலம் முடியும் முன் பலியாகும் வாய்ப்பு உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 4 மாதங்களுக்கு முன் வெளியேறியது. இதையடுத்து ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்தன.
ஆப்கான் அரசை கவிழ்த்து இரண்டு வாரங்களில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தது. அங்கு தாலிபான்களின் தலைமையிலான ஆட்சி பல்வேறு சர்ச்சைகள், சில உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்கு இடையில் நடந்து வருகிறது.

பஞ்சம்
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததில் அங்கு உணவு பஞ்சம் தொடங்கிவிட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக மக்களின் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டது. அதேபோல் மேற்கு உலக நாடுகளின் இறக்குமதி குறைந்த காரணத்தால் கொஞ்சம் கொஞ்சமாக கிடங்குகளில் இருந்த உணவுகள் காலியாக தொடங்கின.

உணவுகள் காலி
இப்போது ஆப்கானிஸ்தானில் உணவு தானியங்கள் இல்லாமல், அரசு மக்களுக்கு உணவு வழங்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறது. தாலிபான்களும் பெரிய அளவில் சர்வதேச உறவுகளை கொண்டு இருக்கவில்லை என்பதால் அவர்களால் சர்வதேச உதவிகளை அவ்வளவு எளிதாக பெற முடியவில்லை. இதன் காரணமாக தாலிபான்களின் ஆட்சிக்கு கீழ் கொஞ்சம் கொஞ்சமாக உணவுப்பஞ்சம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

பஞ்சம் அதிகரிப்பு
போரால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு, வறுமை, இப்போது பஞ்சம் காரணமாக அந்நாட்டு மக்கள் கடுமையாக கஷ்டப்பட்டு உள்ளனர். ஆப்கானிஸ்தானில் 2.28 கோடி மக்கள் பசியால் பாதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சத்தால் இவர்கள் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய பிரிவு தெரிவித்துள்ளது.

பாதி கஷ்டம் '
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் உணவு இன்றி கஷ்டத்தில் இருக்கிறார்கள். அதோடு அங்கு பஞ்சம் காரணமாக 10 லட்சம் குழந்தைகள் இந்த குளிர்காலம் முடியும் முன் பலியாகும் வாய்ப்பு உள்ளது என்றும் இதில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச அமைப்புகளின் உதவிகள் இன்னும் ஆப்கானிஸ்தானுக்கு சென்று சேராத காரணத்தால் மக்கள் கடும் வறட்சியை நோக்கி சென்று கொண்டு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

வறட்சி
ஆப்கானிஸ்தான் மிகப்பெரிய வறட்சியை எதிர்நோக்கி உள்ளது. அந்நாட்டு வரலாற்றில் இதுவரை ஏற்படாத பஞ்சம் ஏற்பட போகிறது. மிகப்பெரிய மனித அவலம் ஏற்பட போகிறது என்று ஐநா தெரிவித்து இருக்கிறது.
Recommended Video

தாலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின் அங்கு பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு கொண்டு வர தாலிபான் அரசிடம் போதிய திட்டங்கள் இல்லை. இந்த நிலையில்தான் ஆப்கான் மிகப்பெரிய பஞ்சத்தை நோக்கி நடைபோட்டு வருகிறது.
-
"டபுள்" கேம் ஆடி ஏமாற்றிய பாகிஸ்தான்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்.. டிரம்ப் குஷியோ குஷி! -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு












Click it and Unblock the Notifications