வேதாந்தா குழும அனில் அகர்வால்-பாபா ராம்தேவ் சந்திப்பு:ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சர்வதேச சதி என புகார்
வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலை பாபா ராம்தேவ் சந்தித்தார்.
Recommended Video
லண்டன்: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வாலை யோகா குரு பாபா ராம்தேவ் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில் சர்வதேச சதி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார் ராம்தேவ்.
நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. இதனை ஒடுக்க போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர்.
இதையடுத்து ஸ்டெலைட் ஆலையை தமிழக அரசு இழுத்து மூடி சீல் வைத்துள்ளது. இந்த நிலையில் லண்டன் சென்றுள்ள யோகா குரு பாபா ராம்தேவ் வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வாலை சந்தித்தார்.
(1/2) Met @AnilAgarwal_Ved ji during my London visit. I salute his contribution in the national building process by creating lacs of jobs and economic prosperity pic.twitter.com/dcmMCcvTg0
— Swami Ramdev (@yogrishiramdev) June 25, 2018
இதனைத் தொடர்ந்து தமது ட்விட்டர் பக்கத்தில் அனில் அகர்வாலுடன் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் தேசத்தின் வளர்ச்சிக்கான கோவில்களே தொழிற்சாலைகள்; ஸ்டெர்லைட் ஆலையை மூடியிருக்கக் கூடாது; பொதுமக்களை சர்வதேச சதிகாரர்கள் தூண்டிவிட்டதாக சராமரியாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
(2/2) International conspirators created ruckus at one of Vedanta’s plant in South of India through innocent local people. Industries are the temples of development for the nation. They should not be closed
— Swami Ramdev (@yogrishiramdev) June 25, 2018