கனடா வாழ் சீக்கியர்கள் வெறிச்செயல்- 3 இந்திய தூதரக அதிகாரிகளை படுகொலை செய்ய அழைப்பு விடுத்து பேனர்!
செர்ரி: சீக்கிய பயங்கரவாதிகள் படுகொலைக்கு பழிவாங்க கனடாவுக்கான 3 இந்திய தூதரக அதிகாரிகளை படுகொலை செய்ய அழைப்பு விடுத்து சீக்கியர்கள் கனடாவில் பேனர் கட்டியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சீக்கியர்களுக்கு காலிஸ்தான் என்ற பெயரில் தனிநாடு அமைக்க வேண்டும் என்பது கனடா வாழ் சீக்கியர்களின் இலக்கு. இந்தியாவின் காலிஸ்தான் பயங்கரவாதம் அழித்தொழிக்கப்பட்டு முடிவுரை எழுதப்பட்டுவிட்டது. இந்த ரத்தம் தோய்ந்த அத்தியாத்தை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதுதான் கனடாவில் பதுங்கி இருக்கும் சீக்கிய பயங்கரவாத கும்பலின் இலக்கு. இதற்காகவே காலிஸ்தான் என்ற பெயரில் பல்வேறு இயக்கங்கள் செயல்படுகின்றன. கனடாவில் இருக்கும் சீக்கிய குருத்வாராக்கள் இந்த பயங்கரவாதிகளின் புகலிடமாக இருந்து வருகிறது.

இந்தியா- கனடா உறவு முறிவு: கனடாவில் பதுங்கி இருந்த இந்தியாவால் தேடப்படுகிற பயங்கரவாதி நிஜ்ஜார் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் கனடாவோ, எங்கள் நாட்டு குடியுரிமை பெற்ற நிஜ்ஜார் படுகொலையில் இந்தியாவுக்கு பங்கு இருக்கிறது என குற்றம்சாட்டியது. இந்த விவகாரத்தில் கனடா- இந்தியா உறவு முறிந்து போய்விட்டது. கனடாவில் இருந்து இந்திய தூதரக அதிகாரி வெளியேற்றப்பட இந்தியாவும் அதே பாணியில் டெல்லியை விட்டு கனேடிய தூதரக அதிகாரியை துரத்திவிட்டது.

படுகொலை செய்ய சீக்கியர்கள் அழைப்பு: இதனைத் தொடர்ந்து இருநாடுகளிடையேயான உறவு மிகவும் சீர்குலைந்து போயிருக்கிறது. இந்த நிலையில் எரிகிற நெருப்பில் பெட்ரோல் டேங்கை கவிழ்ப்பது போல, சீக்கிய பயங்கரவாதிகள் ஒரு வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட செர்ரி நகர குருத்வாரா ஒன்றில் ஒரு பேனரை கட்டி வைத்துள்ளனர் சீக்கியர்கள். அதில் சீக்கிய பயங்கரவாதிகள் படுகொலைக்கு பழிவாங்கும் வகையில் 3 இந்திய தூதரக அதிகாரிகள் கொல்லப்பட வேண்டும்; அதாவது 3 இந்திய தூதரக அதிகாரிகளை படுகொலை செய்யவேண்டும் என அழைப்பு விடுத்து அந்த பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில் 3 இந்திய தூதரக அதிகாரிகள் படங்கள், பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. இது மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆடிப் போன கனடா: இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளின் புகலிடமாக உருமாறிப் போய்விட்டது கனடா என்பதற்கு இதைவிட வேறு சாட்சி இருக்கவே முடியாது என்பதை உலக நாடுகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுவிட்டது நமது நாடு. இதனால் ஆடிப் போயிருக்கிறது கனடா. அத்துடன் உடனடியாக இந்தியாவுக்கு எதிரான இத்தகைய பேனர்கள், போஸ்டர்களை குருத்வாராக்கள் நிறுத்தவும் கனடா உத்தரவிட்டுள்ளதாம். குருத்வாராக்களில் லவுட் ஸ்பீக்கர் மூலம் பிரசங்கங்கள் நிகழ்த்தவும் கனடா அரசு தடை விதித்துவிட்டதாக கூறப்படுகிறது.
-
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications