Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் சீனாவில் கொரோனா பாதிப்பு.. இதை முடிவுக்கு கொண்டுவர என்னதான் வழி? விழிபிதுங்கும் ஆய்வாளர்கள்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: சீனாவின் வூஹான் நகரில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அங்கு இருக்கும் 1.12 கோடி மக்களிடம் கொரோனா பரிசோதனை செய்யும் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

Recommended Video

    மீண்டும் அதிகரிக்கும் Coronavirus.. தடுக்க முடியாமல் விழிபிதுங்கும் China

    கடந்த 2019இல் இறுதியில் முதல்முதலில் சீனாவின் வூஹான் நகரிலேயே கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனாவின் தோற்றம் பற்றி இன்னும் தெளிவாக நமக்கு எதுவும் தெரியவில்லை.

    ஆனால், கடந்த 2 ஆண்டுகளாகவே ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. எந்த நாடும் இதுவரை கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து தப்பவில்லை.

    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ்

    என்னதான் சீனாவில் முதல் முதலில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டாலும், கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மூலம் அந்நாடு மிக விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டது. கொரோனா பரவ தொடங்கியதுமே முக்கிய நகரங்களில் முழு ஊரடங்கைச் சீனா அறிவித்தது. வீடுகளை விட்டு வெளியே வர மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு முழுமையாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பிறகே, வீடுகளை விட்டு வெளியே வர மக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

    சீனா

    சீனா

    கடந்த ஆண்டு பிற்பகுதியில் உலகமே கொரோனா பாதிப்பு காரணமாகத் திண்டாடிக் கொண்டிருந்த சமயத்தில், சீனா மட்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தது. பார்ட்டிகள், பட்டமளிப்பு விழா என கிட்டதட்ட வழக்கமாக அனைத்து நடவடிக்கைகளையும் சீனா தொடங்கிவிட்டது. அதி தீவிரமான கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பாதிப்பை மிகச் சிறப்பாகக் கட்டப்படுத்தியது. இந்தச் சூழலில் தான் இப்போது மீண்டும் சீனாவை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இந்த முறை டெல்டா கொரோனா பாதிப்பு.

    டெல்டா கொரோனா

    டெல்டா கொரோனா

    இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா இப்போது உலக நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இப்போது டெல்டா கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுதான் இப்போது சீனாவுக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. பல வாரங்களாக கட்டுக்குள் இருந்து கொரோனா பாதிப்பு, சீனாவில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அங்கு ஒரு சில நாட்களில் 100க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    கொரோனா பரிசோதனைகள்

    கொரோனா பரிசோதனைகள்

    குறிப்பாக, கடந்த 2019இல் கொரோனா முதலில் கண்டறியப்பட்ட வூஹான் நகரில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் அங்குள்ள 1.12 கோடி மக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் நகரிலுள்ள மக்களிடையே மாதிரிகள் சேமிக்கப்பட்டு, பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல நகரங்களில் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

    கொரோனா வேக்சின்

    கொரோனா வேக்சின்

    என்ன தான் தீவிரமான கட்டுப்பாடுகளை விதித்து கொரோனாவை கட்டுப்படுத்தினாலும் அது தற்காலிகமானது தான் என்பதையே இது காட்டுகிறது. வேக்சின் மட்டுமே கொரோனாவை தடுக்க ஒரே தீர்வு. பொதுமக்கள் அனைவரும் வேக்சின் எடுத்துக் கொண்டால் மட்டுமே, கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியும் என்பதால், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக கொரோனா வேக்சின்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என ஆலோசனை அளித்துள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+