மலேசியா சோகம்.. நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24ஆக உயர்வு.. 9 பேர் மாயம்
கோலாலம்பூர்: மலேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதேபோல மேலும் 9 பேர் இதில் சிக்கி இருக்கிறார்கள் என்றும், அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது.
பொதுவாக மலேசியாவில் நிலச்சரிவு காரணமாக அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுவது இயல்புதான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த உயிரிழப்புகள் கவனமாக தவிர்க்கப்பட்டு வந்தன.
இவ்வாறு இருக்கையில் நேற்று அதிகாலை படாங் கலியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 94 பேர் சிக்கிக்கொண்டனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நிலச்சரிவு
மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சுமர் 50 கி.மீ தொலைவில் உள்ள படாங் கலி பகுதியானது பிரபலமான மலைப்பகுதியாகும். இங்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் இங்கு சட்டத்திற்கு புறமான வகையில் சில முகாம்களும் செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு இருக்கையில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக படாங் கலியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் மண் சரிந்து சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு நிலத்தை அப்படியே மூடியிருக்கிறது. இதில் சோகம் என்னவெனில் இந்த நிலச்சரிவில் 94 பேர் இருந்த முகாம் முழுமையாக சிக்கிக்கொண்டது. விவரம் அறிந்து உடனடியாக தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணியில் இறங்கினர்.

9 பேர் மாயம்
மொத்தமாக 135 மீட்பு படையினர், 7 மோப்ப நாய்கள் இது தவிர அகழ்வாராய்ச்சியாளர்கள் சிலர் என பெரிய அளவில் மீட்பு பணிகள் தொடங்கின். 94 பேரில் தற்போது வரை 61 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக இருந்த நிலையில் இன்று ஒரு பெண் 2 குழந்தைகள் உட்பட 7 பேரின் உடல்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புத் தலைவர் நோரஸாம் காமிஸ் கூறுகையில், "இந்த பகுதியில் சேற்றின் எடை அதிகமாக இருக்கிறது. நாங்கள் இன்னும் 9 பேரை கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. அவர்களை தீவிரமாக தேடி வருகிறோம். இவர்கள் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு. மட்டுமல்லாது மீட்பு பணிக்கு இடையூறாக மழை வேறு குறுக்கீடு செய்கிறது. எப்படியாயினும் அவர்களை கண்டுபிடித்து விடுவோம்" என்று கூறியுள்ளார்.

மீட்பு பணியில் சுணக்கம்
நோரஸாம் காமிஸ் கூறியதை போல கனமழை கரணமாக மீட்பு பணியில் சிறிது தோய்வு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை 7 மணியளவில் தொடங்கிய மீட்பு பணிகள் கனமழை காரணமாக இரவு முழுவதும் நிறுத்தப்பட்டன. மழை நின்ற பின்னர் இன்று காலை 8.30 மணியளவில் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. படாங் கலி பகுதியில் இயங்கி வந்துள்ள இந்த முகாம் சட்ட விரோதமானது என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், 100 அடி உயரத்திலிருந்து சுமார் 4,50,000 கனமீட்டர் அளவு மண் சரிந்து இந்த முகாமை மூடியிருக்கிறது.

நிவாரணம்
இவ்வளவு பெரிய விபத்தில் சிக்கியவர்கள் உயிர் பிழைத்திருப்பது கடினம் என்று விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த விபத்தையடுத்து நாடு முழுவதும் பல மாநிலங்களில் உள்ள வன முகாம்கள் மற்றும் ஆஃப்-ரோடுகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.1.8 லட்சமும், உயிர் பிழைத்த குடும்பங்களுக்கு சுமார் ரூ.18 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும் என அந்நாடு பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்திருக்கிறார். இதேபோல கடந்த ஆண்டு பெய்த கன மழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சுமார் 7 மாநிலங்களில் மட்டும் 21 ஆயிரம் பேர் தங்கள் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு குடிபெயர்ந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications