கினியாவில் எபோலா காய்ச்சல் 59 பேர் பலி
கொனாக்ரி,கினியா: மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கினியாவிலும் மற்றும் அதன் எல்லைப் பகுதியான சியாரா லியோனிலும் எபோலா காய்ச்சல் பரவியுள்ளது. இந்த நோய் தொற்று காரணமாக 59 பேர் வரை அடுத்தடுத்து பலியாகியுள்ளதாக கினியா அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
கினியாவின் தென்கிழக்கு நகரங்களிலும், தலைநகர் கொனக்ரியிலும் கடந்த மாதம் 9ஆம் தேதியிலிருந்து இரத்த சோகை நோய்க்காய்ச்சலான எபோலா தாக்கியுள்ளது உறுதி செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
மனிதர்களிடத்தில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் கடுமையான காய்ச்சலான இதில் இறப்பு எண்ணிக்கையும் 90 சதவிகிதமாக இருக்கும் என்று குறிப்பிடப்படுகின்றது. இந்தக் காய்ச்சலால் இதுவரை 59 இறப்புகள் உட்பட 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பிரான்ஸ் நாட்டின் லியான் சோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்ட 12 ரத்த மாதிரிகளில் 6 முடிவுகள் இந்தக் காய்ச்சலை உறுதி செய்துள்ளன என்று கினியாவின் சுகாதார அமைச்சகத்தின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவின் தலைவரான டாக்டர் சகோபா கெய்ட்டா குறிப்பிட்டார்.
இதுதவிர கடுமையான வயிற்றுப்போக்கு போன்ற காரணங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
கினியாவிலும், சியாரா லியோனிலும் நடைபெற்றுள்ள சம்பவங்களில் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் இரத்தப்போக்கு போன்ற ஒரேமாதிரியான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாக உலக சுகாதாரக் கழகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டில் உகாண்டாவில் ஏற்பட்ட எபோலா காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளும் நோய் கட்டுப்பாட்டு மையத்தில் பரிசோதனையில் ஒப்பிடப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதற்கு முன்னால் இது போன்ற நோய்த்தாக்கம் கினியாவில் பதிவு செய்யப்பட்டதில்லை என்பதும் அதிகாரிகளால் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
திசைமாறிய திருமாவளவன்.. திடீரென தேர்தல் ‘ரிவர்ஸ்’ கியர்.. அப்செட்டான திமுக! இதான் ரியல் காரணம்? -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி! ஆதாரத்தை காட்டி பிரேமலதா விமர்சனம் -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
“எங்கள் கைதியாக இருப்பதே உங்க பையனுக்கு பாதுகாப்பு!” அமெரிக்க விமானியின் தாய்க்கு ஈரான் மெசேஜ் -
அறிவார்ந்த அரசியல்வாதி.. சுந்தர்.சி-யால் பயத்தில் இருக்காரு.. பிடிஆரை சீண்டும் பாஜக நிர்வாகி குஷ்பு! -
Tata: டாடா அறக்கட்டளையிலிருந்து விலகினார் "டிவிஎஸ்" வேணு சீனிவாசன்! பின்னணி என்ன? -
"ஒரு நிமிடம் 2 டிரோன்கள்.." அமெரிக்க உளவு துறை அலுவலகத்தை காலி செய்த ஈரான்! உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications