இது ஆபத்து.. இலங்கை பாதையில் போகும் ஜப்பான்.. பொருளாதாரம் முக்கியம்!
ஜப்பானின் மத்திய வங்கி சமீபத்தில் கடந்த 30 வருடங்கள் இல்லாத அளவு வட்டி விகிதங்களை உயர்த்தியதை வைத்து பார்த்தால், ஜப்பானும் இலங்கை வழியில் பயணிக்கிறதோ என்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அது எப்படி.. ஜப்பான் மிகப்பெரிய உற்பத்தி துறை சார்ந்த பொருளாதார நாடுதானே, அதைப் போய் இலங்கையோடு ஒப்பிடுவதா என்று உங்களுக்கு தோன்றலாம். மேலோட்டமாகப் பார்க்கும்போது ஜப்பானும் இலங்கையும் துருவங்களாகத் தோன்றினாலும் இந்த கட்டுரை, வேறு ஒரு பிரச்சினையை அடிக்கோடிட்டு காட்ட உள்ளது.

ஜப்பான் அபரிமிதமான செல்வம் மற்றும் ஸ்திரத்தன்மையைக் கொண்டுள்ளது; இலங்கை 2022-ல் திவாலாகி கடுமையான பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்தது. ஆனால், இரு நாடுகளுமே விநியோகப் பதட்டங்களை (Distributional Conflicts) எதிர்கொள்வதற்குப் பதிலாக, நிதிக் கொள்கை மூலம் அவற்றை மறைக்க முயன்றன என்பதே கசப்பான உண்மை.
ஜப்பானின் பொதுக் கடன் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 230 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இருப்பினும், அந்த நாடு இன்னும் வீழாமல் இருப்பதற்குக் காரணம், அதன் கடனில் 90 சதவீதம் உள்நாட்டிலேயே இருப்பதுதான்.
மிகக் குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் மத்திய வங்கியின் ஆதரவு காரணமாக, ஜப்பானால் அரசியல் ரீதியாகச் சங்கடமான மாற்றங்களைத் தள்ளிப்போட முடிந்தது.
இதனால் அந்நாடு ஒரு நெருக்கடியைத் தவிர்த்தாலும், 1990-களுக்குப் பிறகு அதன் சராசரி உண்மையான GDP வளர்ச்சி 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இது ஒருவகை "உயிரற்ற தேக்கநிலை" (Managed Stagnation) ஆகும். புதுமை மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாடு இல்லாததால், ஜப்பான் தனது உயிர்ச்சக்தியை மெல்ல மெல்ல இழந்து வருகிறது.
இலங்கை ஜப்பானைப் போன்ற பாதுகாப்பு வளையங்களைக் கொண்டிருக்கவில்லை. அது மலிவான உள்நாட்டுக் கடனுக்குப் பதிலாக, வெளிநாட்டுக் கடன்களையும், வருவாய் தராத வரிச் சலுகைகளையும் நம்பியது.
2021-ல் வரி வருவாய் மிகக் குறைந்தபோது, வெளிநாட்டு நிதி வரத்து நின்றது. இது திடீர் மற்றும் கடுமையான பொருளாதாரச் சரிவுக்கு வழிவகுத்தது. ஜப்பானைப் போலன்றி, இலங்கையில் ஏற்பட்ட இந்த மோதல், பல ஆண்டுகளாகத் தள்ளிப்போடப்பட்ட சீர்திருத்தங்களை (வரி உயர்வு, மானியக் குறைப்பு) ஒரே நேரத்தில் அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியது.
பொருளாதார பலம் என்பது கடன் விகிதங்களை மட்டும் சார்ந்தது அல்ல; மாறாக, காலமாற்றத்திற்கு ஏற்பச் சுமைகளையும் பலன்களையும் பகிர்ந்துகொள்ளும் அரசியல் விருப்பத்தைச் சார்ந்தது.
வலுவான நாடுகள் தங்களின் ஸ்திரத்தன்மையைக் கண்டு அலட்சியமாக இருக்கக் கூடாது. அதேபோல், வளரும் நாடுகள் நெருக்கடி வரும் வரை காத்திருக்காமல், முன்கூட்டியே படிப்படியான சீர்திருத்தங்களைச் செய்யும் நிறுவனக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.
நிதி வளங்களால் அரசியல் முடிவுகளை நிரந்தரமாக ஒத்திவைக்க முடியும் என்ற மாயையிலிருந்து நாடுகள் வெளியேற வேண்டும் என்பதே இக்கட்டுரையின் சாராம்சம்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications