அமெரிக்காவின் புளோரிடா பள்ளியில் முன்னாள் மாணவன் நடத்திய பயங்கர துப்பாக்கிச் சூடு- 17 பேர் பலி
அமெரிக்காவின் புளோரிடா பள்ளியில் முன்னாள் மாணவன் நடத்திய வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலியாகினர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 17 பேர் பலி
புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் பள்ளிக்கூடத்தில் நடைபெற்ற பயங்கர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 17 பேர் பலியாகி உள்ளனர்.
புளோரிடாவின் ப்ரோவார்ட்கவுண்டி பள்ளிக் கூடத்தில் திடீரென துப்பாகிச் சூட்டு சப்தம் கேட்டது. இதையடுத்து மாணவர்கள் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 17 பேர் பலியாகினர். 18 வயதான முன்னாள் மாணவர் ஒருவரே இந்த பயங்கர துபாக்கிச் சூட்டை நடத்தியதும் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதற்கு முன்னர் கடந்த மாதம் 15 வயது மாணவர் ஒருவர் பென்டனில் 2 பேரை சுட்டுக் கொன்ற சம்பவமும் நடந்தது.












Click it and Unblock the Notifications