தீவிரவாதி லக்வியை தடுப்புக் காவலில் வைத்தது செல்லாது: பாகிஸ்தான் கோர்ட்
இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதல் சம்பவத்தின் முக்கிய தளபதியாக செயல்பட்ட ஷகி உர் ரக்மான் லக்வியை தடுப்புக் காவலில் வைப்பதற்கு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு முக்கிய தளபதியாக செயல்பட்ட ஷகி உர் ரக்மான் லக்வி மீது பாகிஸ்தானில் வழக்கு தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். இந்த வழக்கில் லக்விக்கு எதிராக போதுமான சாட்சியம் இல்லாததால் அண்மையில் ஜாமீன் வழங்கி பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு இந்தியா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து பொது ஒழுங்கு பராமரிப்பு உத்தரவின் கீழ் லக்வியை உடனே தடுப்புக்காவலில் வைத்தது பாகிஸ்தான் அரசு.
ஆனால் தம்மை தடுப்புக் காவலில் வைத்ததை எதிர்த்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் கடந்த 26-ந் தேதி லக்வி மேல்முறையீடு செய்தான். இம்மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், லக்வியைத் தடுப்புக் காவலில் வைத்ததற்கு இடைக்காலத் தடை விதித்தது.
இதனிடையே லக்வியை மற்றொரு வழக்கில் தடுப்புக் காவலில் வைக்கப் போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications