சீனாவைப் பின்னுக்குத் தள்ளும் இந்தியா... 2026-ல் மக்கள் தொகையில் இந்தியா முதலிடம்!
இந்தியாவின் மக்கள் தொகை 2 மில்லியன் உயர்ந்து அடுத்த பத்தாண்டுகளில் மக்கள் தொகை 150 கோடியாக மாறும் என ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்: இந்தியா அடுத்த பத்தாண்டுகளில் உலகில் அதிக மக்கள் தொகை நாடுகளில் முதலாவது இடத்தைப் பிடிக்கும் என ஐநா அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியா மக்கள் தொகையில் உலகில் உள்ள நாடுகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. தற்போதைய மக்கள் தொகை 130 கோடி. சீனா மக்கள் தொகையில் முதலாவது இடத்தில் உள்ளது.
ஆனால், இன்னும் பத்தாண்டுகளில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இந்தியா முதல் இடத்தைப் பிடிக்கும் என ஐநா மற்றும் 'ஆர்கனைசேஷன் ஃபார் எகனாமிக் குரோத் அண்ட் டெவலப்மெண்ட்' என்கிற அமைப்பு இணைந்து தெரிவித்துள்ளது.

பத்தாண்டுகளில் எகிறும் மக்கள் தொகை
தற்போது உலகின் மொத்த மக்கள் தொகை 730 கோடி. இந்த மக்கள் தொகை 2026ஆம் ஆண்டில் 820 கோடியாக இருக்கும் என்று ஐநாவும் ஆர்கனைசேஷன் ஃபார் எகனாமிக் குரோத் அண்ட் டெவலப்மெண்ட் அமைப்பும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. அதுவும் உலகின் மொத்த மக்கள் தொகையில் 56 சதவீதம் மக்கள் தொகை இந்தியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் இருக்கும் என இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

பின் தங்கும் சீனா..முதல்படியில் இந்தியா
இந்திய மக்கள் தொகை தற்போது 130 கோடியாக உள்ளது. அடுத்த 2016ஆவது ஆண்டில் 150 கோடியாக உயர்ந்துவிடும் என ஐநா தெரிவித்துள்ளது. இதனால் முதலிடத்தில் இருக்கும் சீனாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு, இந்தியா முதலிடத்தைப் பிடிக்கும் என ஐநா அறிக்கை தெரிவிக்கிறது.

சீனாவின் நிலவரம்
சீனாவின் தற்போதைய மக்கள் தொகை 138 கோடியாக உள்ளது. அதிலும் 50 சதவீதத்துக்கும் மேலானவர்கள் 55 வயதைக் கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவின் மக்கள் தொகை 2030ஆம் ஆண்டில் 140 கோடியாக இருக்கும் என கூறப்படுகிறது.

இளமையான இந்தியா
இந்தியா தற்போது மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் இருப்பினும், அதிகமான மக்கள் இளமையானவர்களாக இருப்பதால் இந்தியாவின் பெரும் பலமே மனிதவளம் தான் என்கின்றன உலக அமைப்புகள். அடுத்த பத்தாண்டுகளில் மக்கள் தொகை 20 கோடி அதிகரித்தாலும், அப்போதும் இந்தியா இளமையான நாடு என்பதுதான் சிறப்பு.

உணவுக்கு அச்சமில்லை
இந்தியாவில் மக்கள் தொகை வளர்ந்தால் அனைவருக்கும் உணவு எப்படி என்று அச்சப்பட வேண்டாம். பால் உற்பத்தியில் உலகின் முன்னணி உற்பத்தியாளராக விளங்கும் என்றும், அதாவது 49% பால் உற்பத்தி அதிகரிக்கும் என அந்த அறிக்கை கூறுகிறது. பால் மட்டுமில்லாது கோதுமை உற்பத்தி அடுத்த பத்தாண்டுகளில் 11% அதிகரிக்கும் எனவும் நம்பிக்கை அளிக்கும் விதத்தில் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

அடிப்படை வசதிகள்?
அடுத்த பத்தாண்டுகளில் 2 மில்லியன் மக்கள் அதிகரித்தால் இருப்பிடம், குடிநீர், சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைகள் தேவைகள் குறித்து அந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் உயரும் மக்கள்தொகைக்கு ஏற்ப இந்த அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க அரசு இப்போதே திட்டமிடுவது அவசியம் என அறிஞர்கள் எச்சரிக்கின்றனர்.
-
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்!












Click it and Unblock the Notifications