காதல் தகராறு: அமெரிக்காவில் பள்ளித் தோழனைக் கொன்ற இந்திய வம்சாவளி மாணவன் கைது
வாஷிங்டன்: காதலியோடு சேர்ந்து தன்னை ஏமாற்றிய பள்ளித் தோழனை கத்தியால் குத்திக் கொலை செய்த பயோ மெடிக்கல் பயின்று வரும் இந்திய வம்சாவளி மாணவனை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர்.
வாஷிங்டன் நகரில் வசித்து வந்த இந்திய வம்சாவளி வாலிபரான 24 வயது ராகுல் குப்தா, ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் 'பயோமெடிக்கல்' படித்து வரும் மாணவர்.
கடந்த ஞாயிறன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், தனது நண்பர்கள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து விருந்தளித்துள்ளார் ராகுல். அப்போது அவர்களது வீட்டில் இருந்து அதிக சப்தம் கேட்பதாக சந்தேகத்தின் பேரில் போலீசில் புகார் அளித்துள்ளார் அருகாமையில் வசிக்கும் பெண் ஒருவர்.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ராகுலின் வீட்டில் கத்திக்குத்துக் காயங்களுடன் கிடந்த சடலத்தைக் கைப்பற்றியதோடு, ராகுலையும் கைது செய்தனர்.
ராகுலிடம் நடத்தப் பட்ட விசாரணையில், ‘கொலை செய்யப்பட்ட மார்க் எட்வர்ட் வாக் என்பவன் தன்னுடன் விர்ஜினியாவில் உள்ள லேங்லி பள்ளியில் ஒன்றாக படித்தவன் என்றும் தனது காதலியும் அவனும் சேர்ந்து தனக்கு துரோகம் செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளான்.
விருந்துக்கு வந்த இடத்தில் இருவருக்கும் இடையில் வாய் தகராறு ஏற்பட்டதாகவும் தன்னை வாக் கத்தியால் குத்த வந்ததாகவும், அந்த கத்தியை பறித்து அவனை குத்திக் கொன்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளான் ராகுல்.
கைது செய்யப்பட்ட ராகுலுக்கு ஜாமீன் தர நீதிமன்றம் மறுத்து விட்டது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications