அமெரிக்காவில் இந்திய மாணவர் மர்ம சாவு: 7 ஆண்டுகளுக்கு முன் பெற்றோரும் சுட்டுக் கொலை
பிலடெல்பியா: அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர் ஒருவர் தனது அறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அமெரிக்காவில் உள்ள பெனிசில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் ஸ்கூல் பிலடெல்பியாவில் உள்ளது. இந்த கல்லூரியில் படித்து வந்தவர் இந்தியா வம்சாவளி மாணவர் புல்கித் சிங்(20). அவர் கல்லூரி வளாகத்திற்கு வெளியே தங்கி படித்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த வாரம் தனது அறையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி அப்போது 13 வயதான புல்கித் தனது 12 வயது தம்பி அங்கூர் சிங்குடன் பள்ளிக்கு சென்றார். பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சகோதரர்கள் தங்கள் பெற்றோர் ஜஸ்பல்(46) மற்றும் கீதா(38) சுட்டுக் கொல்லப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் நியூயார்க்கின் நசாவ் கவுன்ட்டியில் உள்ள சியோசெட் என்ற இடத்தில் நடந்தது.
கடந்த 2011ம் ஆண்டு புல்கித் தி நியூயார்க் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் தனது பெற்றோரை கொன்ற நபர் சுதந்திரமாக சுற்றித் திரிவதாக தெரிவித்துள்ளார். படிப்பில் கெட்டிக்காரரான புல்கித் வார்ட்ன் தவிர ஸ்கூல் ஆஃப் என்ஜினியரிங் அன்ட் அப்ளைட் சயன்சஸில் வேறு படித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications