அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை
அமெரிக்காவின் மிசூரி மாகாணத்தில் உள்ள கான்சாஸ் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் சரத் கோப்பு என்ற இந்திய மாணவர் பலியாகியுள்ளார்.
தெலங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான சரத் கோப்பு, மிசூரி பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.
இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ள கான்சாஸ் நகர போலீஸார், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சரத் அங்கு பலியானார் என கூறியுள்ளனர்.
சரத்தைத் துப்பாக்கியால் சுட்ட நபர் அடையாளம் காணப்படவில்லை என்றாலும், சந்தேக நபரின் காணொளியை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
மிசூரி பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டே, சம்பவம் நடந்த உணவகத்தில் சரத் வேலை செய்துகொண்டிருந்தார்.
சரத்தின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ள போலீஸார், துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபரைப் பற்றிய தகவல் கொடுத்தால் 10,000 டாலர் வெகுமதி அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.
ஐதராபாத்தில் உள்ள வாசவி பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவு செய்த சரத், உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றவர்.
சரத்தின் தந்தை ராம் மோகன், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
இதே போல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா என்ற பென்பொருள் பொறியாளர் கான்சாஸ் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பிற செய்திகள்
- "அமெரிக்காவின் மனநிலை வருத்தமளிக்கிறது" - கோபத்தில் வட கொரியா
- உலக்கோப்பை கால்பந்து: 28 ஆண்டுகளுக்கு பின் அரையிறுதியில் இங்கிலாந்து
- 'ஆடுகள் மீது காட்டும் அக்கறை மனிதர்கள் மீது இல்லை'
- உடல் துர்நாற்ற பிரச்னைக்கு உருவாகிறது தீர்வு
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications