பிரிட்டனில் இருந்து பார்சலில் வந்த 1000 உயிருள்ள எறும்புகள்... ஷாக்கான சீன சுங்க அதிகாரிகள்!
பெய்ஜிங்: பிரிட்டனில் இருந்து பார்சல் மூலம் கடத்தி வரப்பட்ட ஆயிரம் உயிருள்ள எறும்புகளை சீன சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
சீனாவில் மின்னணு வர்த்தகம் அதிகரித்துள்ள நிலையில், செல்லப்பிராணிகள், பாம்புகள், பூச்சிகள் போன்ற விஷ உயிர்களும் பார்சல்கள் வழியே அனுப்பப்படுகின்றன. ஆனால் இவை சட்டவிரோதமான கடத்தல் என்பதால், சீன சுங்க அதிகாரிகள் விழிப்புடன் ஒவ்வொரு பார்சலையும் தீவிரமாக சோதனை செய்த பின்னரே அவற்றை உரியவர்களிடம் அளிக்கின்றனர்.
இந்நிலையில், ஹூனான் மாகாணத்தில் பிரிட்டனில் இருந்து வந்த பார்சல் ஒன்றின் மீது சீன சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த பார்சலை அவர்கள் சோதனை செய்து பார்த்ததில், அதில் 1000 எறும்புகள் உயிருடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

கட்டெறும்புகள்:
சோதனைக் குழாயில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்த எறும்புகள் 1.4 செமீ நீளத்தில் கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் இருந்துள்ளன. உடனடியாக அந்தப் பார்சலை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை அளித்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். பார்சலில் கடத்தி வரப்பட்டவை கட்டெறும்பு வகையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

செல்லப்பிராணிகளுக்கு உணவு:
சீனாவில் தற்போது செல்லப்பிராணிகளுக்கு உயிருள்ள எறும்புகளை உணவாகக் கொடுப்பது வழக்கமாகி வருகிறது. இந்த எறும்புகளையும் அதற்காகவே கடத்தி வந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இதுவும் காரணம்:
அதோடு, கட்டெறும்புகள் பார்ப்பதற்கு அழகான தோற்றத்தில் இருப்பதாலும், அதி விரைவாக தங்களது இனைத்தைப் பெருக்கிக் கொள்ளும் திறன் பெற்றிருப்பதாலும் அவற்றை சீனர்கள் அதிகம் விரும்புவதாகத் தெரிகிறது. இதனால் அவற்றை மர்மநபர்கள் சட்டவிரோதமாக கடத்தி வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

சட்டவிரோதம்:
ஆனால், சீனாவில் பார்சல் மூலமாக உயிருள்ள விலங்குகளை அனுப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அனுப்பப்படும் விலங்குகளால் தங்களது நாட்டிற்கு தீங்கு ஏற்படலாம் என அந்நாடு கருதுகிறது. இதனால், எறும்புகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் அனுப்பிவர்கள் குறித்த தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications