அதிபரை கொலை செய்ய சதி... மாலத்தீவு துணை அதிபர் அகமது ஆதீப் கைது!!
மாலே: மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூமை கொலை செய்ய சதி செய்ததாக அந்நாட்டு துணை அதிபர் அகமது ஆதீப் இன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமின் அண்மையில் செளதிக்கு குடும்பத்துடன் ஹஜ் யாத்திரை சென்றார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து தலைநகர் மாலேவுக்கு சொகுசு படகு மூலம் திரும்பிக் கொண்டிருந்தார்.

மாலே துறைமுகத்துக்கு அந்த படகு வந்த போது திடீரென குண்டு வெடித்தது. இதில் அதிபர் யாமின் மனைவி மற்றும் 2 பேர் காயம் அடைந்தனர். அப்துல்லா யாமின் காயமின்றி மயிரிழையில் தப்பினார்.
இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய 2 பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இதனிடையே அதிபர் பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடிக்காக ராணுவ அமைச்சர் ஜலீல் அண்மையில் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அதிபரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாக அந்நாட்டின் துணை அதிபர் அகமது ஆதீப் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனா சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு மாலே திரும்பிய அவர் விமான நிலையத்திலேயே சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
தற்போது அந்த நாட்டின் ராணுவ மந்திரி மூசா அலி ஜலீல் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதிபர் பாதுகாப்பில் நடந்த குளறுபடிக்கு பாதுகாப்பு மந்திரிதான் பொறுப்பு என்ற அடிப்படையில் அவர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications