துபாய்க்கு தப்பிய முஷாரப்- "தலைமறைவு" என பாக். கோர்ட் பிரகடனம்- 30 நாளில் கைது செய்யவும் உத்தரவு!!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் சர்வாதிகாரி பர்வேஷ் முஷாரப் தேசதுரோக வழக்கில் ஆஜராகாததால் 'தலைமறைவாகிவிட்டதாக' பாகிஸ்தான் நீதிமன்றம் பிரகடனம் செய்துள்ளது. அவரை 30 நாட்களுக்குள் கைது செய்யவும் அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 1999-ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை பிடித்தவர் ஜெனரல் பர்வேஸ் முஷாரப். 2008-ல் பதவி விலகிய பின் துபாய்க்கு தப்பி ஓடினார். 2013-ம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பிய முஷாரப்புக்கு எதிராக தேசத்துரோக வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன.

ஆஜராக மறுப்பு
இதில் நீதிபதி மஷார் ஆலம் கான் மினாகெல் தலைமையிலான சிறப்பு நீதிமன்றத்தில் முஷாரப் மீதான தேசத்துரோக வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக பல்வேறு சம்மன்கள் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை.

துபாய் எஸ்கேப்
இதனிடையே வெளிநாடு செல்வதற்கு முஷாரப்புக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் அண்மையில் விலக்கியது. இதைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்காக அவர் கடந்த சில நாட்களுக்கு முன் துபாய் புறப்பட்டு சென்றார்.

'தலைமறைவு' பிரகடனம்
இந்நிலையில் முஷாரப் மீதான தேசத்துரோக வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வரும் முஷாரப்பை "தலைமறைவானவர்" என நீதிமன்றம் பிரகடனம் செய்தது. மேலும் 30 நாட்களுக்குள் முஷாரப்பை கைது செய்து ஆஜர்படுத்துமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சொத்து முடக்கம்?
அத்துடன் முஷாரப்பின் சொத்து விவரங்களையும் தாக்கல் செய்யவும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் முஷாரப்பின் சொத்துகளை முடக்கி அவருக்கு எதிரான நடவடிக்கைகளை சிறப்பு நீதிமன்றம் தீவிரப்படுத்தக் கூடும் என தெரிகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications