இந்தியாவின் பொருளாதார தடைக்கு பதிலடி- இந்திய டிவி சேனல்களுக்கு நேபாள ஆபரேட்டர்கள் தடை!
காத்மண்டு: நேபாளத்தில் மதச்சார்பற்ற அரசியல் சாசனம் பிரகடனப்படுத்தப்பட்டது முதல் இந்தியாவுடனான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தியா விதித்த பொருளாதரத் தடைக்கு பதிலடியாக இந்திய டிவி சேனல்களை ஒளிபரப்புவதை நேபாள கேபிள் ஆபரேட்டர்கள் நிறுத்தி உள்ளனர்.
உலகின் ஒரே இந்து நாடு என்ற பெருமைக்குரியது நேபாளம். அங்கு மன்னராட்சி முடிவுக்கு மக்களாட்சி நடைமுறைக்கு வந்த நிலையில் அண்மையில் புதிய அரசியல் சாசனம் பிரகடனம் செய்யப்பட்டது.

இந்துநாடாக இருந்தபோதும் மதச்சார்பற்ற அரசியல் சாசனத்தை அந்நாடு பிரகடனம் செய்தது. இந்த புதிய அரசியல் அமைப்பில் தாங்கள் 2-ம் தர குடிமக்களாக நடத்தப்படுவதாக இந்திய வம்சாவளி சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்தப் போராட்டங்கள் குறித்து இந்தியா கவலை தெரிவித்த கையோடு இப்பிரச்சனைக்கு தீர்வு காண சில பரிந்துரைகளையும் வழங்கியது. ஆனால் இதை நேபாளம் நிராகரித்தது.
இதனால் ஆத்திரமடைந்த மத்திய அரசு எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொண்டு செல்லும் போக்குவரத்தை திடீரென நிறுத்தியது. இதில் நேபாளம் கடும் அதிருப்தி அடைந்தது.
இந்தியாவின் இத்தலையீட்டுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய டிவிசேனல்களை ஒளிபரப்பக் கூடாது என்ற கலகக் குரல் அங்கு வெடித்தது. இதனைத் தொடர்ந்து 42 இந்திய டிவி சேனல்களின் ஒளிபரப்பை நேபாள கேபிள் ஆபரேட்டர்கள் சங்கம் ரத்து செய்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications