நியூசிலாந்தில் முதன்முறையாக.. கொரோனா தினசரி பாதிப்பு 200-ஐ கடந்தது.. அதிகரிக்க காரணம் என்ன?
ஆக்லாந்து: உலகம் முழுவதும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆட்டம் போட்டு வரும் கொரோனா இன்னும் மக்களை மிரட்டி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, இந்தியா என வல்லரசு நாடுகளை அசைத்து பார்த்து விட்டது.
இந்தியாவில் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்து விட்டாலும் அமெரிக்கா உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில் கொரோனா ஆதிக்கம் தொடர்ந்து அதிகமாக இருக்கிறது. பல நாடுகள் புதிதாக கொரோனா அலைகளையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகின்றன.

டெல்டா வகை கொரோனா
இதற்கு முக்கிய காரணம் கொரோனா தொற்று உருமாறி வருவதுதான். டெல்டா வகை கொரோனாதான் மீண்டும் தொற்று அதிகரித்து வருவதற்கு அதி முக்கிய காரணம். தற்போது இந்த டெல்டா வைரஸ்தான் நியூசிலாந்து நாட்டையும் பாடாய்ப்படுத்தி வருகிறது. உலகின் அனைத்து நாடுகளையும் கொரோனா கட்டி வைத்திருந்தாலும் நியூசிலாந்தில் அதிக பாதிப்பு ஏற்படவில்லை.

நியூசிலாந்தில் கொரோனா அதிகரிப்பு
அங்கு தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. கொரோனா வந்த காலத்தில் இருந்தே நியூசிலாந்தில் தினசரி பாதிப்பு 100-ஐ தாண்டாமல் இருந்தது. ஆனால் டெல்டா வைரஸ் அங்கு புகுந்ததனால் செப்டம்பர் மாதத்தில் இருந்து கொரோனா அதிவேகமாக அதிகரிக்க தொடங்கியது. முதன்முறையாக 100-ஐ கடந்த தினசரி பாதிப்பு இப்போது 200-ஐ கடந்து விட்டது.

முதன்முறையாக இரட்டை சதம்
நியூசிலாந்தின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான ஆக்லாந்தில் நாட்டில் அதிகபட்சமாக முதன் முறையாக 206 கொரோனா பாதிப்பு பாதிவாகி உள்ளது. இதுவே நியூசிலாந்து வரலாற்றில் பதிவான அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும். நியூசிலாந்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2500-ஐ கடந்துள்ளது. தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவந்த போதிலும் உருமாறிய கொரோனா அங்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

78 சதவீதம் பேர் தடுப்பூசி
நியூசிலாந்தில் 2 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 78 சதவீதம் பேர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர். 89 சதவீதம் பேர் முதல் டோஸ் பெற்றுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியதற்காக சர்வதேச அளவில் பாராட்டு பெற்ற நியூசிலாந்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,000ஐ தாண்டவில்லை. கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications