உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை - மோடியிடம் உறுதியளித்த புடின்

உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்திருக்கிறார்

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்திருக்கிறார். பிரதமர் மோடியுடன் தொலைபேசி உரையாடலின் போது ரஷ்ய அதிபர் புதின் உறுதி அளித்துள்ளதாக ரஷ்யா தகவல் வெளியிட்டுள்ளது.

உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடினிடம் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்கு புடின் இந்தியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என்று உறுதி அளித்துள்ளதாக ரஷ்யா தகவலை வெளியிட்டுள்ளது.

சோவியத் யூனியனில் அங்கம் வகித்த உக்ரைன் நாடு தற்போது, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும் நேட்டோ அமைப்புடன் இணைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

உக்ரைன் - ரஷ்யா போர் பதற்றம்

உக்ரைன் - ரஷ்யா போர் பதற்றம்

உக்ரைனின் இந்த நடவடிக்கை அண்டை நாடான ரஷ்யாவின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கருதி, உக்ரைனை ரஷ்யா எச்சரித்து வந்தது. மேலும், உக்ரைனைச் சுற்றி லட்சக்கணக்கான வீரர்களுடன் கூடிய ராணுவத்தை கடந்த சில வாரங்களுக்கு முன்னரே நிறுத்திவைத்தது ரஷ்யா. இது உலக நாடுகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. போர் தொடுக்க வேண்டாம் என்று ரஷ்யாவுடன் பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தின.

உக்ரைனை தாக்கிய ரஷ்யா

உக்ரைனை தாக்கிய ரஷ்யா

உக்ரைன் மீது போர் தொடுத்தால் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு எச்சரிக்கைவிடுத்தன. இருப்பினும் வியாழக்கிழமையன்று அதிகாலையில் திடீரென ரஷ்யா போரைத் தொடர்ந்தது. இது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உக்ரைனும் உலக நாடுகளில் உதவியைக் கோரியுள்ளது.

மோடி பேச்சு

மோடி பேச்சு

இந்த விவகாரத்தில் இந்தியா தலையிட்டு ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி வலியுறுத்தியிருந்தார். இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலை வகிப்பதாக அறிவித்துள்ளது எனினும்,
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், ‘உக்ரைன் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்தியர்கள் பாதுகாப்பு

இந்தியர்கள் பாதுகாப்பு

பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் தீர்வு காண்பதற்கு அனைத்து தரப்பினரும் கூடிய ஒருங்கிணைந்த நடவடிக்கை வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், உக்ரைனிலிருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பு குறித்து குறிப்பாக மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் புடினிடம் மோடி எடுத்துரைத்தார்.

Recommended Video

    Ukraine, Russia, America இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?
     மோடியிடம் புடின் உறுதி

    மோடியிடம் புடின் உறுதி

    உக்ரைனில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்திருக்கிறார். பிரதமர் மோடியுடன் தொலைபேசி உரையாடலின் போது ரஷ்ய அதிபர் புதின் உறுதி அளித்துள்ளதாக ரஷ்யா தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என்று உறுதி அளித்துள்ளதாக ரஷ்யா வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+