பாகிஸ்தானில் தங்கத்துக்கு ஈடாகும் தக்காளி.. தக்காளிகளால் நகை அணிந்த மணப்பெண்..
Recommended Video
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தக்காளி விலை கிடுகிடு என உயர்ந்து வரும் நிலையில் அந்நாட்டின் பொருளாதாரத்தை கிண்டல் செய்யும் விதமாக தக்காளிகளால் செய்யப்பட்ட நகையை அணிந்திருந்தார்.
ஜம்மு- காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டவுடன் இந்தியா மீது பாகிஸ்தான் பொருளாதார தடை விதித்தது. இந்த நிலையில் இந்தியா, ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து தக்காளி இறக்குமதிக்கு பாகிஸ்தான் தடை செய்துள்ளது.
இதனால் பாகிஸ்தானில் தக்காளியின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ . 300-ஐ தாண்டியது. சமையலுக்கு மிகவும் அத்தியாவசிய பொருளான தக்காளியின் விலை உயர்வால் அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதுபோல் ஹோட்டல்களிலும் தக்காளியின் பயன்பாடு குறைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதே போல் வெங்காயத்தின் விலையும் கிலோ ரூ 90 முதல் ரூ 100 வரை விற்பனையாகிறது.

ஊடகங்கள்
தக்காளி இருக்கும் குடோன்களை சிலர் திருடும் நிலைக்கு சென்றுவிட்டனர். இதனால் பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் தக்காளி வைத்திருக்கும் குடோன்களுக்கு காவலாளிகளை சம்பளம் கொடுத்து நியமித்துள்ளதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தக்காளி
இந்த நிலையில் பாகிஸ்தானில் மணப்பெண் ஒருவர் அந்நாட்டு பொருளாதாரத்தை கிண்டல் செய்யும் நோக்கிலும் தக்காளி விலை குறித்த கவனத்தை ஈர்க்கவும் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கழுத்துக்கு அணியும் நெக்லேஸ், நெத்தியில் வைக்கும் நெத்திச்சுட்டி, தோடு உள்ளிட்டவற்றை தக்காளியை அணிந்திருந்தார்.

அதிக விலைக்கு விற்பனை
இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதற்காக மணப்பெண் வீட்டார் 3 பாக்ஸ் தக்காளிகளை வாங்கியுள்ளனர். இதுகுறித்து மணப்பெண் கூறுகையில் தங்கம் விலை உயர்ந்த ஒன்றாகும். அது போல் தக்காளிகளும் பைன் கொட்டைகளும் மிகவும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
|
பாடாய்படுத்தும் விலை
ஒரு பெண்ணின் பெற்றோர் தக்காளிகளை வாங்கித் தர முடிந்தால் போதும் அவர்கள் அந்த பெண்ணுக்கு தங்கம், வைரத்தையும் வாங்கித் தரும் சக்தி அவர்களுக்கு உண்டு என்பதை புரிந்து கொள்ளலாம். அந்தளவுக்கு தக்காளி விலை பாடாய்படுத்துகிறது என்றார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications