Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உக்ரைன் ரஷ்யா இடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை - போர் முடிவுக்கு வருமா

ரஷ்யா உக்ரைன் இடையே நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

கீவ்: உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான மூன்றாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை இன்று நடைபெற வாய்ப்புள்ளதாக உக்ரைன் அதிபரின் அதிகாரியை மேற்கோள் காட்டி உக்ரைன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைனுக்குள் கடந்த மாதம் 24 ஆம் தேதி நுழைந்த ரஷ்ய ராணுவம், தலைநகர் கிவ் மற்றும் 2வது பெரிய நகரமான கார்கிவ் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து தாக்கி வருகிறது. ரஷ்யாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிவதால் உக்ரைன் உருக்குலைந்து போயுள்ளது.

Peace talks today resume between Ukraine and Russia

சில இடங்கள் முழுமையாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. பல லட்சம் பேர் நாடுகளை விட்டு வெளியேறி பல நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.இந்திய மாணவர்கள் பலரும் ஆபரேசன் கங்கா மீட்பு நடவடிக்கைகள் மூலம் மீட்கப்பட்டு நாடு திரும்பி வருகின்றனர்.

இந்த நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்ய நாட்டு பிரதிநிதிகள், பெலராஸில் இருமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். முதலாவதாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாத நிலையில், 2வது பேச்சுவார்த்தையில் மனிதாபிமான முறையில் சில நடவடிக்கைகள் முன்னெடுப்பது என முடிவு செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இருநாடுகளுக்கு இடையிலான 10வது நாளில், உக்ரைனின் இரண்டு முக்கிய நகரங்களில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, மீண்டும் உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. நேட்டோ உறுப்பு நாடுகள் உதவ முன்வராததால் ரஷ்யப் படைகள் தனது விமானத் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளன. இன்று முதல் இறக்கும் ஒவ்வொரு மக்களும் மக்களும் உங்களால் இறந்ததாக கருதுகிறோம்' என்று கூறப்பட்டது.

இதுவரை 1.45 மில்லியன் மக்கள், உக்ரைனை விட்டு வெளியேறியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயர்வு அமைப்பின் கூற்றுப்படி, 7,87,300 அகதிகள் போலந்துக்கும், 228,700 பேர் மால்டோவாவிற்கும், 144,700 பேர் ஹங்கேரிக்கும், 132,600 பேர் ருமேனியாவிற்கும் 100,500 பேர் ஸ்லோவாக்கியாவிற்கும் சென்றுள்ளனர். உக்ரைனில் குறைந்தது 351 மக்கள் கொல்லப்பட்டதாகவும், 707 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் இந்த செயலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன

இந்த சூழ்நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என ஏற்கனவே பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட உக்ரைன் அதிகாரி டேவிட் தெரிவித்துள்ளார். எனினும், எந்த இடத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+