அமீரக உயர்வுக்காக உயிரைக் கொடுத்து உழைக்கும் இந்தியத் தொழிலாளர்களுடன் மோடி சந்திப்பு
அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் வானுயர்ந்த கட்டிடங்கள், ஹோட்டல்கள் மற்றும் அருங்காட்சியகங்களை கட்டும் இந்திய தொழிலாளர்களை அபுதாபியில் உள்ள தொழிலாளர் முகாமில் வைத்து பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் அரசு முறைப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார். ஞாயிற்றுக்கிழமை அபுதாபிக்கு சென்ற மோடிக்கு அரசு சார்பில் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்துமாறு சர்வதசே அளவில் கோரிக்கை எழுந்துள்ள நிலையில் மோடி அமீரகம் சென்றுள்ளார். நேற்று இரவு மோடிக்கு அபுதாபி இளவரசர் ஹமீது பின் ஜயீத் அல் நஹ்யான் விருந்து அளித்தார். விருந்தின்போது அவர் இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக அவர் அபுதாபியில் உள்ள தொழிலாளர் முகாமிற்கு சென்றார். முகாமிற்குள் மோடி நுழைந்ததும் சுமார் 200 இந்திய தொழிலாளர் கைதட்டி அவரை வரவேற்றனர். முகாமில் உள்ள இந்திய தொழிலாளர்களிடம் மோடி பேசினார். அப்போது அவர் அவர்களின் வேலை, தங்கும் வசதிகள் உள்ளிட்டவை குறித்து விவரம் கேட்டு அறிந்தார்.
துபாயில் நடக்க உள்ள உலக எக்ஸ்போ 2020 மற்றும் கத்தாரில் 2022ம் ஆண்டு நடக்கும் ஃபீபா உலகக் கோப்பை ஆகியவற்றுக்கான அரங்குகள் அமைக்கும் பணியில் இந்திய தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்நிலையில் எந்தவித மனித உரிமை மீறல்களும் நடந்துவிடக் கூடாது என்பதில் இந்திய அரசு தெளிவாக உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications