மடோனாவின் சர்ச்சை கடிதம்; 'பேசிக் இன்ஸ்டிங்ட்' நடிகையின் தாராள குணம்
பிரபல பாடகியான மடோனா 1990களில் எழுதிய ஒரு கடித்தத்தில் , பிரபல நடிகை ஷரோன் ஸ்டோன் 'மிக மோசமான' என்று குறிப்பிட்டிரு ந்தார். தற்போது, அக்கடிதம் வெளியாகியுள்ள நிலையில், அதற்கு தன்னால் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என்று ஷரோன் ஸ்டோன் மறுத்துள்ளார்.
அந்த கடிதத்தில், தன்னுடைய திரை வாழ்க்கையை பேசிக் இன்ஸ்டிங்க்ட் நடிகையுடன் ஒப்பிட்டுப் பேசுவதில் தனக்கு பிடிக்கவில்லை என்று மடோனா தெரிவித்திருந்தார்.
அதற்கு ஃபேஸ்புக்கில் பதிலளித்துள்ள ஷரோன் ஸ்டோன், ''நான் உன்னுடைய தோழி என்பதை தெரிந்துகொள். சில தருணங்களில் நானும் ஒரு ராக் ஸ்டாராக ஆக வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அதே சமயம் நீ வர்ணித்தபடி நான் மிக மோசமான நபராகவும் இருந்திருக்கிறேன்.''
ஏலத்தில் சென்ற மடோனாவின் சில தனிப்பட்ட கடிதங்கள் பொதுவெளியில் வெளியானது அபத்தமான செயல் என்று ஷரோன் கூறியுள்ளார்.
''நான் உன்னை மிகவும் விரும்புகிறேன். நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை பயணத்தில் நடைபெற்ற கசப்பான விஷயங்களை வைத்து உன்னை தவறாக பேச மாட்டேன்.''
நடிகை ஷரோன் ஸ்டோன் போன்ற திரை வாழ்க்கை தனக்கு கிட்டவில்லை என்பதை படித்தவுடன் தான் விரக்தியடைந்ததாக அந்த கடிதத்தில் மடோனா தெரிவித்திருந்தார்.
தற்போது அந்த கடிதம் பொதுவெளியில் கசிந்துள்ள நிலையில் அதற்கு 59 வயதாகும் நடிகை ஷரோன் ஸ்டோன் பதிலளித்துள்ளார்.
'ஜே' என்பவருக்கு கைப்பட எழுதப்பட்டதாக சொல்லப்படும் அந்த கடிதம், ஜான் ஈநோஸ் என்பவருக்கு எழுதப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அந்த சமயத்தில், ஜான் ஈநோஸை மடோனா டேட் செய்து கொண்டிருந்தார்.
அந்த கடிதத்தில், தான் தன்னுடைய இயல்பான நிறத்தில் இருப்பது தனக்கு அசெளகரியத்தை ஏற்படுத்துகிறது என்றும், கருப்பு நிற தோல் இருப்பதால் ஊக்கம் இழந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
''நான் நினைத்திருந்த இசை வாழ்க்கையை விட்னி ஹூஸ்டன் வாழ்ந்து கொண்டிருந்ததாகவும், ஷரோன் ஸ்டோனின் திரை வாழ்க்கை எனக்கு கிடைக்கவில்லை என்பதையும் படிக்கும் போது சந்தேகத்துக்கு இடமின்றி எரிச்சலூட்டியது,'' என்று கூறியுள்ளார்.
''அவர்கள் இருவரும் மோசமான கெட்டவர்கள் மற்றும் என்னை காயப்படுத்த வேண்டும் என்பதற்காக என்னை ஒரு தர அளவீடாக வைக்கிறார்கள்.'' என்று அதில் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
- அணு விஞ்ஞானிகள் ஆய்வு செய்த பிறகே இறைச்சியை உண்டார் சதாம் ஹூசைன்'
- ஆபாசத்தை அழகுபடுத்த முயற்சிக்கும் பெண்!
- பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஆயுதம் ஏந்திய விவசாயிகளின் கதை
- சீனப் போராளி: இறந்தும் வாழும் காதல் கதை
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா














Click it and Unblock the Notifications