இந்தியா, சீனாவுக்கு அடுத்து.. ஆசியாவில் கொரோனா ஆட்டம் ஜாஸ்தியாக இருப்பது.. சிங்கப்பூரில்தான்!
ஹாங்காங்: ஆசிய கண்டத்தில் இந்தியா, சீனாவுக்கு பிறகு கொரோனாவால் அதிகம் பாதித்த நாடாக மாறியுள்ளது சிங்கப்பூர்.
Recommended Video
கொரோனா வைரஸ் 190 நாடுகளுக்கும் மேல் பரவிவிட்டது. இதனால் உலகளவில் 2 லட்சம் பேர் பலியாகிவிட்டனர். எனினும் இதற்கு ஒரு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாததால் இதன் தாக்கத்தை இன்னும் குறைக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

உலகின் மொத்தம் 50 நாடுகளில் 6,300 இந்தியர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். சிங்கப்பூரில் இந்தியர்கள் கொரோனாவால் மோசமாக பாதித்துள்ளனர். இங்கு கொரோனாவால் நேற்று மட்டும் 931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுள் 15 பேர் மட்டுமே சிங்கப்பூரை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் வெளிநாட்டினர். சிங்கப்பூரில் கொரோனாவால் இந்தியர்கள் 50 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் சிங்கப்பூரில் மேலும் 799 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டிவிட்டது. அதாவது கொரோனா பாதிப்பில் ஜப்பானை ஓவர்டேக் செய்துள்ளது சிங்கப்பூர்.
ஆசிய கண்டத்தில் சீனா மற்றும் இந்தியாவுக்கு அடுத்தப்படியாக சிங்கப்பூரில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. உலகின் அதிக மக்கள்தொகையை கொண்டுள்ள சீனாவும், இந்தியாவும் கொரோனா பாதிப்பில் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. ஆனால் மிகவும் குறைந்த அளவிலான மக்கள்தொகையை கொண்டுள்ள இந்த நாட்டில் கொரோனா வேகமாக பரவி வருவது அந்நாட்டினரை கவலையடையச் செய்துள்ளது.
நியூயார்க் நகரை விட மிகச் சிறிய நாடு சிங்கப்பூரில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உள்ளது. இங்கு ஜூன் மாதம் 1ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், அத்தியாவசியமற்ற தொழில்கள் மூடப்பட்டுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications